எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணிகளுக்கான 604 பதக்கங்களை போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும் அத்திவரதர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 28 ஆயிரம் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.
ஜனாதிபதி பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது, இந்த விழாவில் பதக்கங்கள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள காவல் துறையில், காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை மற்றும் தடய அறிவியல் துறை ஆகிய துறைகளில் தகைசால்பணி, மெச்சத்தக்க பணி, பொது சேவையில் சீர்மிகு பணி, சிறந்த நற்பணி, சீர்மிகு புலனாய்வு, விரல் ரேகை அறிவியல் சீர்மிகு பணி, தடய அறிவியல் சீர்மிகு பணி ஆகியவற்றிற்கான ஜனாதிபதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அருள்மிகு அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்களை 604 நபர்களுக்கு இச்சிறப்புமிகு விழாவில் வழங்கியதில் நான் பெரும் மகிழ்ச்சியடைவதோடு, பதக்கங்கள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதுடன், அவர்கள் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் மட்டும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். காவல் துறை பணிகளில் குறுக்கீடு செய்ய யாருக்குமே அதிகாரமில்லை என்பது தான் எனது திடமான கருத்து ஆகும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதலமைச்சர் கூட அதன் செயல்பாடுகளில் தலையிடமுடியாது என்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் காவல் துறையினரை பற்றி குறிப்பிடுகையில், நான் எங்கே வைத்து காவல்துறையினரை பற்றி பேசுகிறேன் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு தாய்த்தன்மைக்கு ஈடாக, என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு ஈடாக வைத்து எண்ணுகிறேன் என்று காவல்துறையைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறியுள்ளார். காவல்துறையின் செயல் திறம் சிறக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளையும், காவலர்களின் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்களையும் நமது இரு பெரும் தலைவர்களும் செயல்படுத்தியுள்ளனர். இவர்களின் நல்லாசியுடன் செயலாற்றும் அம்மாவின் அரசும் இந்தப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு காவல் துறையினர், தங்களது சிறப்பான செயல்பாடுகளினால், வரவுள்ள பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மாநிலத்தில் சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி, பொதுஅமைதியை பேணிக் காத்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி, குற்ற நிகழ்வுகளைத் தடுத்து வருவதுடன், குற்ற வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தந்தும் வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான குற்ற நிகழ்வுகள் கணிசமாக குறைந்துள்ளன.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற கோட்பாட்டின்படி அம்மாவின்அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமானால், அந்த மாநிலத்தின் மக்கள் வளம் பெற வேண்டும். மக்கள் வளம் பெற வேண்டுமெனில் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கென இது போன்ற பல்வேறு காரணிகள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பொது அமைதி, பாதுகாப்பு ஆகியவைதான். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் காரணிகளும் இருந்தாலும், அமைதியான சூழ்நிலை நிலவவில்லை என்றால் அங்கே எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படாது. எனவே தான் பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், சட்ட ஒழுங்கிற்கும் மிகுந்த முக்கியத்துவத்தை அம்மாவின் அரசு அளித்து வருகிறது. இதன் பயனாக தமிழ்நாட்டை நாடி பல்வேறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளன. இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் சந்திப்பும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.