எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.- 7 - மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்கினார். இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து அழகரை தரிசித்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைதிருவிழா சைவ, வைணவ பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வுகளான பட்டபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து மீனாட்சியையும், சுந்தரேசுவரையும் தரிசித்தனர். கடந்த 4ம் தேதி உற்சவ சாந்தியுடன் மீனாட்சி திருவிழா முடிவடைந்த நிலையில், அழகர் திருவிழா துவங்கியது. கடந்த 4ம் தேதி மாலை 6 மணிக்கு சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி சேலை கட்டி கையில் தடியுடனும், நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் வேடம் பூண்டு மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல், சுந்தர்ராஜன்பட்டி வழியாக நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வந்து சேர்ந்த அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து அழகரை தரிசித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள திருக்கண்களில் எழுந்தருளிய அழகர் இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் அழகரை வழிபட்டனர். இங்கு அழகரை தரிசிக்க விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பின்னர் பெருமாள் திருமஞ்சனமாகி தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணியளவில் குதிரை வாகனத்தில் சாத்துப்படியாகி, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் அழகர் காட்சியளித்தார். தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த அழகர் தங்ககுதிரை வாகனத்தில் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், அழகர் வேடம் அணிந்திருந்தவர்களும் தாரை தப்பட்டை முழங்க அழகரை வரவேற்றனர். கள்ளழகர், அனுமன் வேடமிட்டும், காவடி ஆட்டம் ஆடியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியும் அழகரின் முன்பு பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். வைகை ஆற்றுக்குள் உள்ள வெள்ளம் கரைக்கு வந்து விட்டது போல தல்லாகுளத்தில் இருந்து வைகை ஆறுவரை மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த படி ஜொலிக்கும் தங்ககுதிரை வாகனத்தில் அழகர் வந்தது பார்ப்பவர்களை பரவசமடைய செய்தது. மூங்கில் கடை வீதியில் உள்ள பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிய அழகர் காலை 5.30 மணிக்கெல்லாம் வைகை கரையில் உள்ள கடைசி மண்டகப்படிக்கு வந்து விட்டார். முன்னதாக அழகரை வரவேற்பதாக வெள்ளைக்குதிரை வாகனத்தில் வந்த வீரராகவபெருமாள் வைகை ஆற்று பந்திலில் காத்திருந்தார். அழகரை தரிசிக்க தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து 10 லடசத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு இருந்தனர். வைகை ஆற்றுக்குள்ளும், வைகை கரை ஓரமும் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. வைகை ஆற்றில் தண்ணீர் வெள்ளத்திற்கு பதில் மக்கள்வெள்ளம் வந்து விட்டதோ என்று பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. மேலும் வைகை ஆறு மட்டுமின்றி ஏவி மேம்பாலம், கல்பாலம், பிடிஆர் பாலம், வைகை கரையின் வட, தென்பகுதி என எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சியளித்தது. வைகையில் அழகர் இறங்குவதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் காலையிலேயே மதுரைக்கு வந்து அழகரை காண்பவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டது. இந்த தண்ணீருக்குள் நின்றபடி அழகரை தரிசிக்க பக்தகோடி பெருமக்கள் குழந்தை, குட்டிகளுடன் காத்துக்கொண்டிருந்தனர். கோடானு கோடி கண்கள் அழகர் பாதையையே பார்த்துக்கொண்டிருக்க வான வெடி சத்தத்துடன் காலை 5.50மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினார் அழகர். இதை திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என்ற கோஷத்துடன் அழகரை தரிசித்தனர். ஏராளமானோர் செம்புகளில் இனிப்பை வைத்து சூடம் ஏற்றி அழகரை நோக்கி பூஜை செய்தனர்.
வைகை ஆற்றுக்குள் இறங்கிய அழகரை வீரராகவ பெருமாள் பந்தலுக்குள் இருந்து வெளியே வந்து வரவேற்றார். பின்னர் அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பூஜை முடிந்ததும் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த பந்தலை மூன்று முறை சுற்றிவந்து நாலாபக்கமும் திரண்டு இருந்த பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 7.05 மணிக்கு வைகை ஆற்றுக்குள் இருந்து அழகர் புறப்பட்டார். வைகை கரையோரம் உள்ள திருக்கண்களில் அழகர் எழுந்தருளி விட்டு 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வந்தார். அங்கு அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தண்ணீர் பையுடன் காத்திருந்தனர். அவர்கள் அழகரின் முகத்தை பார்த்ததும் பரவசம் அடைந்து அழகரை நோக்கி தண்ணீரை நோக்கி பீய்ச்சி அடித்தனர். இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு இங்கிருந்து புறப்பட்ட அழகர் அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலை அடைந்தார். இங்கு விடிய,விடிய பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழிபட்டனர். இன்று காலை 7 மணிக்கு அழகர் கருட வாகத்தில் எழுந்தருளி பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபகப்படிக்கு வருகிறார். இங்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். இங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிவிட்டு இரவு 10 மணிக்கு ராமராயர்மண்டகப்படிக்கு வருகிறார். இங்கு விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளைமறுநாள் காலை மோகினி அவதாரத்தில் அழகர் புறப்படுகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியான நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், டிஐஜி பாலநாகதேவி, எஸ்பி அஸ்ராகார்க், நகர் போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 22 உதவி கமிஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 300 எஸ்ஐக்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வைகை ஆறு, கோரிப்பாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். மொத்தத்தில் இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவிவிற்கு இந்த வருடம் கூட்டம் அதிகம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
-----
டிசி பாக்ஸ்
--------
மாவட்ட நிர்வாகம்- மாநகராட்சிக்கு
பொதுமக்கள் பாராட்டு
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதற்காக கடந்த சில நாட்களாக கலெக்டர் சகாயம், மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ்கமிஷனர் சஞ்சய்மாத்தூர், எஸ்பி அஸ்ராகார்க் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை எந்த குறையும் இன்றி செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம், மேயர் ராஜன்செல்லப்பா ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர். இந்த தீவிர நடவடிக்கையால் நேற்று பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக எங்கு பார்த்தாலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதே போல போலீசாரின் தீவிர நடவடிக்கையால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இன்றி பக்தர்கள் மகிழ்ச்சியாக அழகரை தரித்து விட்டு ஊர் திரும்பினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
-----
பச்சை பட்டில் அழகர்
நாடு செழுமை அடையும்
வைகை ஆற்றுக்குள் இறங்கும் அழகர் என்ன கலர் பட்டு உடுத்தி இறங்க போகிறார் என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துஏ இருந்தனர். அழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கியதும் அழகரின் முகத்தை தரிசித்த பக்தர்கள் அடுத்து அவர் என்ன பட்டு உடுத்தி இருக்கிறார் என ஆவலுடன் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். நேற்று வைகை ஆற்றில் இறங்கிய அழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். பச்சை பட்டு செழுமையை தரும். நாடு சுபீட்சம் பெரும். விவசாயம் செழிக்கும் என தெரிவித்தனர்.
---
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.