எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்- ஆழ்துளை கிணறு அமைக்க கட்டாயம் முன்அனுமதி அவசியம் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் உடனான விழிப்புணர்வு குழுக்கூட்டம் கலெக்;டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், ஏற்கனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை வரைமுறைப்படுத்திடும் நோக்கில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுவோர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடந்த 2015-ஆம் ஆண்டில் அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடும் நபர்கள் மாவட்ட நிர்வாகத்தில் முறையே விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றிட வேண்டும். அதேபோல புதிய கிணறு தோண்டுதல்ஃஏற்கனவே உள்ள கிணறுகளை புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள கிணறு உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு சார்ந்த செயல் அலுவலரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே துவங்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும்.
பணிகளை துவங்கும் முன் கிணற்றின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட கிணற்றின் வகை, ஆழம் மற்றும் குறுக்களவு, பணி மேற்கொள்பவர் , கிணற்றின் உரிமையாளர் குறித்த விபரங்களை பணி நடக்கும் இடத்தில் அறிவிப்புப் பலகையாக அமைத்திட வேண்டும். பணி நடக்கும் இடத்தினைச் சுற்றி முள் கம்பி வேலி அல்லது தடுப்பு அமைக்கப்பட வேண்டும். கிணற்றைச் சுற்றிலும் 0.5 ஓ 0.5 ஓ 0.6 மீ அளவில் நில மட்டத்திலிருந்து 0.3 மீ மேல்புறமும், 0.3 மீ நிலத்திற்கு கீழ்புறமும் உள்ளவாறு தளம் அமைத்திட வேண்டும். பணி இடைவெளியின்போது துளையிடப்பட்ட குழிஃகிணறு சரியான முறையில் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். பணி நிறைவுற்ற பின் கிணற்றைச் சுற்றியுள்ள சகதி குழிகளும், கால்வாய்களும் நிரப்பி மூடப்பட்டு முன்பிருந்த நிலைக்கு தரைமட்ட நிலையை கொண்டுவர வேண்டும். ஆழ்துளைக் கிணற்றின் மேல்புறத்தை உறுதியான மூடியைக் கொண்டு குழாயுடன் இணைத்து மூட வேண்டும். தமிழ்நாடு அரசு வரையறுத்துள்ள இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுவோர் தவறாமல் பின்பற்ற வேண்டும். இத்தகைய விதிமுறைகளை முறையே பின்பற்றாமல் மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதோடு பணியில் ஈடுபட்ட ஆழ்துளைக் கிணறு அமைக்கும் உரிமையாளர்களின் பதிவுச் சான்று ரத்து செய்யப்படும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்திரன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் லூ.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெ.சரவணக்கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.