எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இது பகல் - இரவாக நடத்தப்படும் போட்டி என்பது கூடுதல் விசேஷமாகும். இதனால் இந்த டெஸ்ட் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெஸ்ட் அரங்கில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா முதல்முறையாக பகல் - இரவு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் பகல் - இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டிய இந்திய அணி, சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் ஆனதும், சம்மதம் தெரிவித்து விட்டது. பகல் - இரவு டெஸ்டுக்கு மினுமினுப்பான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. இது தான் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக் கூடியதாகும். பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களின் ஜாலம் கொடிகட்டி பறக்கும். மாலைவேளையில் பந்து கண்ணுக்கு தெளிவாக தெரிவதில் சிக்கல் உள்ளது.
அதாவது சூரிய வெளிச்சம் மறைந்து, மின்னொளி எரியவிடப்படும் சமயத்தில் அதற்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் தங்களை துரிதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் தான் முந்தைய பகல் - இரவு டெஸ்டுகளில் அதிகமான விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இந்த தடைகளை பேட்ஸ்மேன்கள் எப்படி உடைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய அணியில் புஜாரா, ஜடேஜா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் 2016-ம் ஆண்டு துலீப் கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் பிங்க் பந்தில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவங்களை சக வீரர்களிடம் பகிர்ந்துள்ளது உதவிகரமாக இருக்கும். சாதனையின் விளிம்பில் உள்ள விராட் கோலி 32 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.
சாதகமான சூழலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சாதிக்கும் முனைப்புடன் வரிந்து கட்டுகிறார்கள். இந்த தொடரையும் இந்திய அணி வசப்படுத்தினால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்ற 12-வது தொடராக இது பதிவாகும். வங்காளதேச அணியும் இதற்கு முன்பு பகல் - இரவு டெஸ்டில் ஆடியது கிடையாது. முதலாவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் அடங்கிப்போன அந்த அணி இந்த டெஸ்டிலும் நிலைகொண்டு ஆடுவது சந்தேகம் தான். இருப்பினும் இந்தியாவுக்கும் இது தான் முதல் ‘பிங்க்’ டெஸ்ட் என்பதால் தங்களால் சமாளிக்க முடியும் என்று வங்காளதேச வீரர்கள் நம்புகிறார்கள்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க நிறைய பிரபலங்கள் கொல்கத்தாவில் குவிந்துள்ளனர். போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட், கும்பிளே உள்ளிட்டோர் நேரில் பார்க்க உள்ளனர். செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் போட்டியின் போது கவுரவிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இது 67 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியம் என்பது நினைவு கூரத்தக்கது.
ஈடன்கார்டனில் 1934-ம் ஆண்டில் இருந்து இதுவரை 41 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 12-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும், 20-ல் டிராவும் கண்டுள்ளது. மொத்தம் 76 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முகமது அசாருதீன், வி.வி.எஸ்.லட்சுமண் தலா 5 சதங்கள் அடித்துள்ளனர். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட்டுக்கு 657 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 90 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்38 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 3 hours ago |
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
15 May 2024புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.