எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 15 - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ரூ.5700 கோடி முதலீட்டில் 9530 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிரபல தொழில் நிறுவனங்கள் செய்து கொண்டன.இதுகுறித்து சட்டசபையில் அவர் வாசித்த 110 விதியின் கீழான அறிக்கை வருமாறு:-
தொழில்நுட்ப தகுதியுடன் கூடிய சிறப்பான மனித வளத்தை கொண்டுள்ள தமிழ்நாட்டில், அதிக அளவு தொழில் முனைவோரை ஈர்க்கும் வகையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை, தொலைநோக்குப் பார்வையுடன் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 20 விழுக்காடு அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொலைநோக்குத் திட்டம் 2023 தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் துறையில் நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் ஒரு முன்னணி மாநிலமாகவும், ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதல் 3 இடங்களில் ஒன்றாகவும் தமிழ்நாட்டை உருவாக்கவேண்டும் என்பதும் தொலைநோக்குத் திட்டத்தில் அடங்கியுள்ள குறிக்கோள் ஆகும். இத்தகைய வளர்ச்சியை நாம் அடைய வேண்டுமென்றால் அதற்கு தேவையான எரிசக்தி கிடைப்பதை உறுதிசெய்வது அவசியம் என்பதால், கடந்த 10.5.2012 அன்று கெயில் இந்தியா நிறுவனத்துடன் மிகப்பெரும் எரிவாயு ஒப்பந்தம் ஒன்றினைத் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் எனது முன்னிலையில் கையெழுத்திட்ட விவரத்தை நான் ஏற்கெனவே இந்த அவையில் 11.5.2012 அன்று அறிவித்தேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, இன்று என் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்ற செய்தியை இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.ஒரகடத்தில் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையை 18.4.2012 அன்று நான் திறந்து வைத்ததை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். 2008ஆம் ஆண்டு கடந்த ஆட்சியின்போது டெய்ம்லர் நிறுவனம் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால், அந்நிறுவனம் 2010ஆம் ஆண்டில் தனது முதலீட்டினை 2000 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டது. எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்ட பல முன்னோடி நடவடிக்கைகளின் காரணமாக டெய்ம்லர் நிறுவனம் 2,000 கோடி ரூபாயாக குறைத்த தனது முதலீட்டினை இருமடங்காக்கி 4,000 கோடி ரூபாயாக முதலீடு செய்ய தற்போது முன் வந்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும். ஜப்பான் நாட்டின் உலகப் புகழ்பெற்ற யமஹா நிறுவனம் மோட்டார் சைக்கிள்கள், மின்னணு பொருட்கள், இசைக் கருவிகள், படகுகளுக்கான மோட்டார் என்ஜின்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனமாகும். தற்போது, இந்தியா யமஹா மோட்டார் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் சிப்காட் தொழிற் nullங்காவில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 125 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. இதன் மூலம் 3,000 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் 20 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். அசோக் லேலண்ட் நிசான் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் முந்தைய அரசு 8.9.2008 அன்று லகுரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, 4,150 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டது. ஆனால், இந்நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி வழங்க வேண்டிய நிலம், 21.2.2011 அன்று, அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் முந்தைய அரசால் வழங்கப்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் சில நிர்வாகக் கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து முடிவெடுக்கப்படாததால், இந்தத் திட்டம் தொடங்கப்படாமலேயே இருந்தது. முடங்கிக் கிடந்த இத்திட்டத்திற்கு எனது அரசு மீண்டும் புத்துயிரூட்டி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று கையெழுத்திடப்பட்டது.
ஓசூர், பிள்ளைப்பாக்கம், எண்ணுர், வெள்ளிவாயல்சாவடி மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் அமையவுள்ள இத்திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் எய்ஷர் மோட்டார் நிறுவனம் புதிய தொழிற்சாலை ஒன்றினை ஒரகடத்தில் நிறுவ முன்வந்துள்ளது. இதற்காக, ஒரகடம் சிப்காட் தொழிற்nullங்காவில் 50 ஏக்கர் நிலத்தை எனது அரசு வழங்கியுள்ளது. அங்கு 350 கோடி ரூபாய் முதலீடு செய்ய இன்று அந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 300 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதேபோன்று, ஆர்.பி. கோயங்கா குழுமத்தின் நிறுவனமான ஃபிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிடெட் நிறுவனம், டயர் தயாரிப்பதற்குத் தேவையான கார்பன் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினை 350 கோடி ரூபாய் முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்க்கண்டிகை சிப்காட் தொழிற் nullங்காவில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்ந்தத்தில் இன்று கையொப்பமிட்டது. இத்தொழிற்சாலையில் 230 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இன்று ஏற்படுத்தப்பட்ட இந்த ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் தமிழகத்திற்கு புதியதாக வரக்கூடிய முதலீடு குறைந்தபட்சம் 5700 கோடி ரூபாய் ஆகும். புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகள் 9,530 ஆகும். இன்னும், பல தொழில் முதலீட்டு முன்மொழிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதையும், அவற்றுக்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் விரைவில் கையொப்பமிடப்பட உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இர்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.