எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 29 - தேர்தல் நடைபெறும்போது மாநில அரசு அதிகாரிகளை மாற்ற தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டு, இதுகுறித்து மாநில அரசுக்கு தகவல் தர அவசியமில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனையை எதிர்த்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் தாமாக முன்வந்து எடுத்த `சூமோட்டோ' வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் முதன்மை பெஞ்ச் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் வாகன சோதனையில் இதுவரை பறிமுதல் செய்த 23 கோடி ரூபாயை திரும்ப கேட்டு யாரும் வரவில்லை என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பரபரப்பு தகவலை கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வாகன சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறது. ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படை அதிகாரிகல் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கிறார்கள். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையின் தொடர் நடவடிக்கை காரணமாக தேர்தலில் பணநடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க நினைக்கும் அரசியல்கட்சிகள் திண்டாடி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறினார். அதேபோல் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் கருணாநிதி பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தார். அதன் மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனது மனுவில் வாகனங்களில் மக்கள் கொண்டு செல்லும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியிருந்தார்.
கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். நம்பகமான தகவல் அடிப்படையில்தான் தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். அன்றைய தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டில் தேர்தல் ஆணைய பறக்கும்படை அதிகாரிகள் 3 மணி நேரம் சோதனை நடத்தியும் எதையும் கைப்பற்றப்படவில்லை என்பது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. கே.பி.பி.சாமி சார்பில் வழக்கறிஞர் விடுதலை ஆஜரானார். தில்லை நடராஜன் தொடர்ந்த வழக்கோடு கே.பி.பி.சாமியின் வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. அதேபோல் டி.ஜி.பி. இடமாற்றம் குறித்தும் அன்றைய தினமே விசாரிக்கப்பட்டது. அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், இந்த வழக்குகளில் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேரணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார். அவர் பேசும்போது, தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வேண்டும். அந்த அதிகாரத்திற்கு இடையூறாக இருந்த போலீஸ் அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். நாளொரு மேனியாக பண பறிமுதல் செய்யப்படும் செய்திகள் தொலைக்காட்சிகள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை தமிழகத்தில் 23 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். அதை திரும்ப கேட்டு இதுவரை யாரும் வரவில்லை. இதுபோன்ற சமயத்தில் தேர்தல் ஆணையத்திற்கு குறிப்பிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து மாநில அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசும்போது, இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் என்னென்ன விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றுகிறதோ அதைத்தான் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது என்று கூறினார். தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் கூறும்போது, தேர்தல் ஆணையத்தால் சரிவர தனது பணியை செய்ய முடியாத காரணத்தால் தான் டி.ஜி.பி. லத்திகாசரனை தன்னிச்சையாக இடமாற்றம் செய்ய வேண்டியது இருந்தது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் நடத்தும் வாகன சோதனையை எதிர்த்து கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை ஐகோர்ட் நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானாக முன்வந்து `சூமோட்டோ' வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது நம்பகமான தகவல்கள் இல்லாமல் வாகன சோதனை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு சர்ச்சையையும் உருவாக்கியுது. ஐகோர்ட் நீதிபதிகள் ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் பற்றி தமக்கு தாமாகவே முன்வந்து சூமோட்டோ ரிட் பெட்டிஷனை எடுத்துக்கொண்டு விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் அப்படி சூமோட்டோ வழக்கை எடுப்பதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் நெறிமுறைகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை மற்றும் விதிகளுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும்.
ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சூமோட்டோ வழக்காக எடுப்பதாக இருந்தால் அதை தலைமை நீதிபதியின் பார்வைக்கு எடுத்துச் சென்று வழக்கின் தன்மை குறித்து தீவிர ஆய்வு செய்த பின்னரே அதை சூமோட்டோ வழக்காக எடுக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.
மேலும் சூமோட்டோ வழக்கின் தன்மையானது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் மற்றும் ஐகோர்ட் நெறி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியின் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் கமிஷனின் வாகன சோதனை குறித்து நீதிபதிகல் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் எடுத்துக் கொண்ட சூமோட்டோ வழக்கு குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சி நேற்று விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரணை நடத்தியது. அவர்கள் சூமோட்டோ வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.