எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர், மார்.- 30 - தோல்வி பயத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட கருணாநிதி சதித் திட்டம் தீட்டியுள்ளார் என்று திருவாரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். நேற்று செம்பனார்கோவில், திருவாரூர், புவனகிரி,கடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருவாரூரில் நடந்த பிரச்சாரத்தில் அ.தி.மு,க வேட்பாளர்கள் குடவாசல் ராஜேந்திரன், காமராஜ், ராஜநாயகம், உலகநாதன் ஆகியோர்களை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் பேசியதாவது, சர்வாதிகாரி ஆட்சிக்கு எதிராக எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சியைப்போல் கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக நீங்கல் எல்லாம் இங்கே எழுச்சியுடன் கூடி இருக்கிறீர்கள். பிறரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். வாழவைத்த தமிழர்களை வஞ்சிப்பவர் கருணாநிதி.
கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காதவர் கருணாநிதி. லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்து அவர்களை அழித்தவர் கருணாநிதி. நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் கருணாநிதி. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் கருணாநிதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறார் கருணாநிதி.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.1.80 லட்சம் கோடி ரூபாய். இந்த ஊழல் பணத்தை முதலீடு செய்து அதன்மூலம் சம்பாதித்த பணம் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 1000 ஏக்கருக்கும் மேலான நிலம் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் வாங்கப்பட்டது. யாரிடம் இருந்து வாங்கப்பட்டது தெரியுமா? ஏழை எளிய மக்களாகிய உங்களிடமிருந்து வாங்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலம் 60 ஆயிரம் ரூபாய். இவ்வாறு வாங்கப்பட்ட நிலம் ஒரு சில மாதங்களில் பெரிய கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டது. விற்கப்பட்ட விலை ஒரு ஏக்கர் 18 லட்சம் ரூபாய்.அதாவது ஆறு கோடி ரூபாய் கொடுத்து கொடுத்து ஏழை மக்களிடம் வாங்கப்பட்ட நிலம் 180 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிலம்வாங்கி விற்றதில் லாபம் 174 கோடி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைமைதான். இதன்மூலம் மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கருணாநிதி குடும்பத்தினர் சுருட்டிவிட்டனர்.
ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஏழை மக்களால் அந்த பணத்தை வைத்து ஒரு கிரவுண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது. இதுதான் ஊழலின் உச்சக்கட்டம். இந்த விலையேற்றத்திற்கு கருணாநிதி குடும்பத்தினர்தான் காரணம். நிலத்தின் விலை மட்டுமல்ல. அனைத்துப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் கருணாநிதி குடும்பத்தினர்தான் காரணம். தற்போதைய விலைவாசி உயர்வு என்பது இயற்கையானது அல்லது. கருணாநிதி குடும்பத்தினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மணல் கொள்ளை தமிழகம் முழுவதும் அமோகமாக நடைபெற்றது. இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணல் கொள்ளை மூலம் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி என கருணாநிதி குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
காலாவதியான மருந்து விநியோகம என பலவழிகளில் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டே இருக்கிறது. அனைத்து அரசுத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 1971 முதல் 1976ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற வீராணம் ஊழலில் உயிரை மாய்த்துக் கொண்டவர் காண்ட்ராக்டர் சத்யநாராயணா ரெட்டி. 1989 முதல் 91ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்த டி.ஜி.பி துரை மர்மமான முறையில் இறந்தார். 1996 முதல் 2001ம் ஆண்டுவரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மேம்பால ஊழலில் உயிரை மாய்த்துக் கொண்டவர் சென்னையைச் சேர்ந்த ரமேஷ். இந்த முறை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக சாதிக் பாட்சாவின் உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படுமோ? கொள்ளையடிப்பது கருணாநிதி குடும்பம். பலியாவது உங்களில் ஒருவர். கபடநாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி.
மத்திய அரசில் அங்கம் வகித்தும் அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப பிரச்சனைகளை தீர்க்க கருணாநிதிக்கு வக்கில்லை. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தாரா கருணாநிதி? கர்நாடக அரசோ மேட்டூர் அணையில் நீர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த செயலையும் தட்டிக் கேட்கவில்லை. இவற்றிற்கு காரணம் கர்நாடகத்திலிருந்து வரும் தன் குடும்ப வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதுதான். இப்படி தன் மக்களுக்காக உழைக்கின்ற கருணாநிதி ஆட்சி அதிகாரம் தன்னைவிட்டு போய்விடுமோ என்று தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை தேர்ந்தெடுக்குமாறும், தமிழ் னத்தை பாதுகாக்க தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறும் பேசிவருகிறார். ஊழல் செய்வதில் மட்டுமல்ல மக்களை ஏமாற்றுவதிலும் வல்லவர் கருணாநிதி.
கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால் தமிழக மக்களை விரட்டிவிட்டு தமிழகத்தையே தன் குடும்ப வசம் ஆக்கிக் கொள்வார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அதற்கு ஒரே வழி தேர்தல்தான். இதைப் பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியை குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், செழுமையாகவும், பிரகாசமாகவும் விளங்க அனைவரும் விழிப்புடனும், எழுச்சியுடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். ஜனநாயக கடமையை ஆற்றி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருவாரூரில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். கூத்தாநல்லூர் தனித் தாலுகாவாக அறிவிக்கப்படும். அங்குதரைப்பாலம் அமைக்கப்படும். திருவாரூரில் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். இந்தத் தேர்தலில் தி.மு.க வீழ்வது உறுதி. தேர்தலுக்கு முன்பே கருணாநிதி அ.தி.மு.கவிற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டினார். ஆனால் அவை எடுபடவில்லை. ஆட்சியை தக்க வைப்பதற்காக சதித் திட்டங்களை தீட்டினார். உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதியாகி அனுதாபத்தைப் பெறவும், அந்த அனுதாபம் வெற்றி பெறவில்லை என்றால் வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தி.மு.க.வின் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப