முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா மீண்டும் மனு

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி (நிர்பயா), 6 இளைஞர்களால் கற்பழித்து கொடூரமாக தாக்கப்பட்டார். உயிருக்கு போராடிய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் 6 பேரில் 5 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டான். சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு தனது தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து விடுவிக்கப்பட்டான். மற்ற குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்‌சய் தாக்கூர் ஆகிய 4 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதற்கிடையில் இந்த வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவனான பவன் குமார் குப்தா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தான். அதில், கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்த போது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தான். இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறி பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன் மூலம் நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தாவின் தூக்கு தண்டனையும் உறுதியானது. முன்னதாக பவன் குப்தா இதே போன்ற மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிர்பயா குற்றவாளி பவன் குப்தா சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,சம்பவம் நடந்த போது தான் ஒரு சிறார். எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை சுப்ரீம் கோர்ட் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பவன் குப்தாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்த நிலையில், அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து