எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
2 வது நாளாக விவாதம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசினார். மனோதங்கராஜ் பேசிய போது, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் ஏராளமாக மூடப்பட்டிருக்கின்றன என்றார். அதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளிக்கையில்: தொழிற்சாலைகள் எங்கும் மூடப்படவில்லை. உண்மைக்கு மாறான தகவலை உறுப்பினர் கூறுகிறார். சமீபத்தில் கூட ரூ.4 ஆயிரம் கோடியில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதுபோன்று பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். எந்த தொழிற்சாலையும் மூடப்பட வில்லை. நோக்கியா தொழிற்சாலை ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. அந்த தொழிற்சாலையும் திறக்கப்பட்டு இருக்கிறது என்று பதிலளித்தார்.
பென்ஜமின் பேச்சு
அமைச்சர் பென்ஜமின் பேசும் போது, பொத்தாம்பொதுவாக உறுப்பினர் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. சிறு,தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். சிறு தொழில் துவங்க ஏராளமான சலுகைகள், ஊக்கத்தை அளித்திருக்கிறார். தமிழகம் சிறுதொழிலில் வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டு கொண்டிருக்கிறது என்று பேசினார்.
மனோ தங்கராஜ் பேசிய போது : அமைதி தான் உங்களது தாரக மந்திரம் என்கிறீர்கள். மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கிறீர்கள் என்று கூறினார்.
ஓ.எஸ்.மணியன் பதில்
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: மக்கள் விரோத திட்டம் எதை கொண்டு வந்தாலும், அதனை தமிழக அரசு எதிர்க்கிறது. தடுத்து நிறுத்துகிறது. நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தீர்கள். காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள்? அம்மா உச்சநீதிமன்றம் சென்று போராடி அதனை மத்திய அரசிதழில் இடம் பெற செய்தார். காவிரி நிதிநீர் ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றார்.
உங்கள் ஆட்சியில் மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்ட போது அதனை நீங்கள் எதிர்த்தீர்களா? சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை நீங்கள் எதிர்த்தீர்களா? உங்களது பொதுக்குழுவில் எதிர்த்து தீர்மானம் போட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் வந்தபோது அதனை ஆதரித்து வாக்களித்தீர்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டு போட்டோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், அதனை எதிர்த்திருக்கிறோம். தமிழக ஜீவாதார உரிமைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்த்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறினார்.
பிறகு மனோ தங்கராஜ் பேசிய போது: நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை எதிர்த்து இந்த சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினீர்கள். அது என்ன ஆனது. நீங்கள் தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை எதிர்க்க மறுக்கிறீர்கள். விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடன், வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்தது. அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, அதற்கு இங்கு குரல் கொடுக்கறீர்களே. உங்கள் எம்.பி.க்கள் அதிகம் பேர் பார்லிமெண்டில் இருக்கிறார்களே. அங்கு போய் குரல் கொடுங்கள். இங்கு பேசி பிரயோஜனம் இல்லை. அங்கு போய் சொல்லுங்கள். சொல்ல வேண்டிய இடம் அது தான் என்று கூறினார்.
விஜயபாஸ்கர் பேச்சு
அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது, நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. தான். நீட் தேர்வு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் நீங்கள். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறீர்கள். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்தையும் கொண்டு வந்தது. இதையெல்லாம் நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்களே, அப்போது தட்டி கேட்டீர்களா? ஆனால் நாங்கள் தமிழக உரிமைக்காக பார்லிமெண்டையே முடக்கி இருக்கிறோம் என்றார்.
செங்கோட்டையன் பேச்சு
அமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது, நீங்கள் மத்திய ஆட்சியில் இருந்தபோது உர மானியம் ரத்து செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள். உர விலை ஏறியதற்கு யார் காரணம்? உரம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்திற்கு ரூ.200 விலை உயர்வு ஏற்பட்டது. இதையெல்லாம் நீங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள் என்றார்.
எதிர்கட்சிகள் முயற்சி
முதல்வர் பழனிசாமி பேசுகையில், நான் பேரை சொல்ல விரும்பவில்லை. ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்தார். அப்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார். நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தீர்கள். எனவே தான் இந்த கேள்வி எல்லாம் எழுகிறது என்றார்.
மனோ தங்கராஜ் பேசிய போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். ஆனால் நீங்கள் மத்திய அரசை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். சிறுபான்மை மக்கள் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட வில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறீர்கள்.
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்த சட்டத்தால் எங்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்கு நான் விளக்கம் சொல்லுகிறேன் என்று சவாலாக முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.