எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை மகளிர் டி20 உலக கோப்பை பைனல்: மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
சிட்னி : மழை காரணமாக இங்கிலாந்து - இந்தியா இடையிலான அரையிறுதி ரத்தானதால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறியது.
மற்றொரு போட்டியில் தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா 17ரன் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 18ரன் வித்தியாசத்திலும் , நியூசிலாந்தை 3ரன் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஏ பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் சிட்னியில் காலை முதலே பெய்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நிற்காததால் ஒரு கட்டத்தில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டம் கைவிடப்பட்டாலும் லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இந்தியா முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களில் விளையாடி எல்லாப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 8 புள்ளிகளுடன் இருந்தது. இங்கிலாந்து லீக் சுற்றில் தாய்லாந்தை 98ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 42ரன் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 46 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. தென் ஆப்ரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி என 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த இங்கிலாந்து ஆடாமலேயே போட்டியில் இருந்து வெளியேறியது.
அதேபோல் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 2-வது அரையிறுதி போட்டியும் சிட்னி மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்து. முதலில் களம் கண்ட ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. கேப்டன் மெக் லன்னிங் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார். தெ.ஆப்ரிக்காவின் நடைன் டீ கிளார்க் 3 விக்கெட்களை கைப்பற்றினார். தொடர்ந்து தென் ஆப்ரிக்கா 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் காண இருந்தது. ஆனால் இடையில் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட போது டக்வொர்த் லீவிஸ் 13 ஓவரில் 98 ரன் எடுக்க தெ.ஆப்ரிக்காவுக்கு இலக்கு மாற்றப்பட்டது. ஆனால் 13 ஓவர் முடிவில் தெ.ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன் மட்டுமே எடுத்தது. கடைசி வரை களத்தில் இருந்து போராடிய லாரா வோல்வார்ட் 27 பந்துகளில் 41 ரன் எடுத்தும் பலனில்லாமல் போனது. அதனால் ஆஸ்திரேலியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. நாளை மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், மழை காரணமாக ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் விதிகள் இருக்கின்றன. அவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். வருங்காலத்தில் இதுப்போன்று நடக்காமல் இருக்க போட்டிகள் கைவிடப்படுவதற்கு பதில் இன்னொரு நாள் போட்டியை நடத்த வேண்டும். அதற்கு ஏற்ப போட்டிகளுக்கு இடையே கூடுதலான ஓய்வு நாட்கள் இருக்க வேண்டும்.இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்: ஏமாற்றமாக உள்ளது. உலககோப்பை போட்டி இப்படி முடிவதை விரும்பவில்லை. ஆனால் ஏதும் செய்வதற்கில்லை. ஆனால் தடைபடும் போட்டி இன்னொரு நாளில் நடந்திருந்தால் நல்லது. எங்களுக்கு இழப்புதான். ஆனாலும் அரையிறுதி வரை முன்னேறுவோம் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல