எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பாராட்டியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி இந்த ஊரடங்கு அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என்று அதிரடியாக அறிவித்தார். அதன் படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு என்ற வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கோவிட் 19 எனப்படும் கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக தாங்கள் எடுத்து வரும் தீர்க்கமான துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடிய வைரசில் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காக்க தாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். தமிழகமும் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதை திறம்பட செயல்படுத்தவும் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அத்தியாவசிய சேவைகள் தொடரவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை ஒழித்துக்கட்ட , தனிமைப்படுத்தும் வசதிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட தடுப்பு சாதனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புக்காக நீங்கள் ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நாட்டுக்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றி. தமிழகத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக தமிழக அரசு 10 ஆயிரம் படுக்கைகளை ஒதுக்கி உள்ளது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அதை மேம்படுத்தவும் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அத்தியாவசிய சாதனங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
21 நாட்கள் ஊரடங்கு என்பது பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்து சமீபத்தில் சில நிவாரண உதவிகளை நான் அறிவித்தேன். 144 தடை அமலில் இருப்பதால் ரூ. 3,280 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை நான் அறிவித்துள்ளேன். குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ரேசனில் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீடிக்கும் என்று தங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பாதிக்கும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள். அவர்களிடம் சேமிப்பும் குறைவாக இருக்கும். எனவே அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் துயரங்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்காக தமிழகம் மாதம் ஒன்றுக்கு ரூ. 400 கோடி சம்பளம் ஒதுக்குகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இன்னல் கருதி இந்த ஊழியர்களுக்கு சிறப்பு நிதியாக குறைந்தபட்சம் ரூ. 500 கோடி ஒதுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இதர அமைப்புசாரா துறையில் 15 லட்சம் ஊழியர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் இந்த முழு அடைப்பால் இன்னலுக்கு ஆளாக நேரிடும். அதை கருதி அவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. ஆயிரமும், 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவர்களுக்கு ஏற்படும் சம்பள இழப்பை கருத்தில் கொண்டு ரூ. 500 கோடி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே இந்திய உணவு கழகத்தில் உணவு தானியங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும். இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கி கடனை திருப்பி செலுத்துவதை குறைந்தபட்சம் 2 காலாண்டுக்கு மாற்றி அமைக்க வேண்டும். இந்த சிறு, குறு வியாபாரிகளுக்கான வட்டி மற்றும் அபராதத்தை 2 காலாண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். கொரோனாவை தடுக்கும் பொருட்டு தமிழகத்திற்கு அவசர நிதி தேவைப்படுகிறது. ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த துயரத்தை தீர்க்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும் சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 13 sec ago |
ஆனியன்ப்ரை6 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.