எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி நிதி வழங்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி நேற்று (மார்ச் 28) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு சோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்தலும் சமூக பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்ததற்கு உங்களுக்கு நன்றி. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த பணப்புழக்கம் மற்றும் வட்டி வீதக் குறைப்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஊரடங்கை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலனை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை. தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா தொகுப்பின் மூலம் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. வரும் நாட்களில் இன்னும் நிவாரண நடவடிக்கைகள் தேவைப்படும். சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவப் பொருட்களின் தேவையை உறுதி செய்ய செலவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியைச் சீராக்குவதற்கும், பல்வேறு துறைகள் அவற்றின் வளர்ச்சிப் பாதையில் திரும்புவதற்கும், நுகர்வு மற்றும் முதலீட்டுத் தேவையைத் தூண்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து அரசாங்கங்களும் வரி மற்றும் வருவாயில் கணிசமான குறைப்புகளை சந்திக்க நேரிடும். மேலும், சிறிது காலத்திற்கு வருவாய் திரட்டலை அதிகரிக்க முடியாது. இருப்பினும், செலவு தேவைகள் மற்றும் பொறுப்புகள் காத்திருக்காது. 2020 மார்ச் 25 தேதியிட்ட எனது கடிதத்தில் நான் உங்களிடம் குறிப்பாகக் கோரியது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத நிதி பற்றாக்குறை வரம்புகள் 2019-20 மற்றும் 2020-21 ஆகிய நிதியாண்டுகளுக்கு தளர்த்தப்படலாம். 2019-20 நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 33 சதவிகிதம் கூடுதல் கடன் வாங்குவது 2020-21 வரை அனுமதிக்கப்படலாம் என்பதை வலியுறுத்தினேன். இது கூடுதல் செலவுத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநிலங்களுக்கு உதவும். இது உடனடியாக மாநிலங்களுக்கு செலவினங்களை ஈடுகட்ட உதவும் என்றாலும், மாநிலங்கள் இயற்கையாகவே எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதில் ஒரு வரம்பைக் கொண்டுள்ளன. மேலும் அவை அதிகமாக கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தும் கடமைகளால் முடங்கி விடும். ஆனால், நுகர்வு மற்றும் முதலீட்டைத் தூண்டுவதன் மூலம் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான பொறுப்பு இந்த நேரத்தில் அரசாங்கங்கள் மீது விழுகிறது. இந்திய பொது நிதி அமைப்பின் கீழ், இந்திய அரசால் மட்டுமே, இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் வாங்க முடியும். ஊரடங்கால் பொருளாதார தாக்கம் மிகவும் கடுமையானதாகவும், முன்னெப்போதும் இல்லாத வகையிலும் இருக்கும். இத்தகைய கடினமான காலங்கள் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் மீண்டும் ஊக்கமளிப்பதற்கும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. எனவே, இந்திய அரசு, மாநில அரசுகள் கூடுதல் கடன் வாங்குவதற்கு அனுமதிப்பதோடு, மொத்த தொகையை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் மற்றும் அதன் பின்விளைவுகளை எதிர்த்துப் போராட மாநில அரசுகளுக்கு சிறப்பு மானியமாக ரூ. ஒரு லட்சம் கோடி வழங்க வேண்டும். இது மத்திய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான பிற நிதி பரிமாற்றங்களுடன் கூடுதலாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவின் விகிதத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நிதியை விநியோகிக்க முடியும். ஏனெனில், இந்த மானியத்தின் செலவினம் பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்டு அதன் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த சிறப்பு விநியோகத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ. 9,000 கோடி மானியம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மிகவும் கடினமான மற்றும் சவாலான இந்த காலங்களில், தேசத்தின் நலனுக்காக தைரியமான, கடினமான மற்றும் வழக்கத்திற்கு மாறான முடிவுகளை எடுப்பதில் இருந்து விலகிச் செல்லாத ஒரு பிரதமராக, இந்த சிறப்புக் கோரிக்கையை நீங்கள் கருத்தில் கொண்டு தேவையான தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடிபழனிசாமி அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சிலதினங்களுக்கு முன் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ. 4 ஆயிரம் கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். தற்போது ரூ. 9 ஆயிரம் கோடி கேட்டு அவர் மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவ வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமரும் இதே போல் நாட்டு மக்களுக்கு நிதி உதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.