எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் 3 - ம் கட்டமான சமூக பரவலை தடுக்க தீவிரமாக போராடி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 67 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுமார் 50 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். சுமார் 200 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் மேலும் பரவுவதை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட நெருக்கடி கால மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோல தமிழகத்தில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதிகளும் செய்து கொடுக்க 2 தனிக் குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்புடன் இருக்கும் 10 மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 1½ லட்சம் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் கொரோனாவை தடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இதை தவிர 20 லட்சம் முகக்கவசங்கள், 1,200 செயற்கை சுவாச கருவிகள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் 2 - வது கட்டத்தில் உள்ளது. அடுத்தக்கட்டத்துக்கு அது சென்று விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு சோதனைகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 11 மாவட்டங்களில் இந்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் 2-வது நிலையில் உள்ளது. இந்த 2 - வது நிலையுடன் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கொரோனா வைரசின் 3 - வது கட்டம் என்பது சமூக பரவலாகும். சமூகத்தில் பரவ ஆரம்பித்து விட்டால் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது கஷ்டமாகும். ஆகையால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தீவிரமாக போராடி வருகிறோம்.கொரோனா வைரசை தமிழகத்தில் வேகமாக பரவுவதை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை ஒரே ஒருவருக்குத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. மற்ற அனைவரது நோய் பரவலையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளோம்.தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் வாழும் இடங்களில் இரட்டிப்பு கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.மேலும் புதிதாக யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உதவியாக இருக்கும்.பிப்ரவரி மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் தீவிர விசாரணைக்கும், கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் சாதாரண நிலையில் இருந்தாலும் 28 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர மருத்துவ பரிசோதனை காரணமாக கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. ஆனால் நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தடுக்கப்பட்டு உள்ளது.இந்த நடவடிக்கைகள் தவிர முன்எச்சரிக்கையாகவும் தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்துள்ளது. மருத்துவ உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஓமந்தூரார் மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை மையங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு செய்துள்ள சிறப்பான மருத்துவ திட்டங்கள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் வேகமாக குணம் அடைந்து வருகிறார்கள்.தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் ஒருவர் கூட தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. சென்னை பம்மலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 73 வயது பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நன்றாக குணமாகி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை எத்தகைய சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. நீண்டகால நடவடிக்கையாக இருந்தாலும் அதை சமாளிப்பதற்கான அனைத்து வசதிகளும் தமிழக அரசிடம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.