எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா நோயின் வலிமையை அறிந்து மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 12 சிறப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கொரோனா எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் 26-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கு இன்று இரவு 9 மணி வரை அமலில் உள்ளது. சேலம், திருப்பூர் மாநகராட்சிகளிலும் 26-ம் தேதி துவங்கிய முழு ஊரடங்கு நேற்று இரவு 9 மணியுடன் முடிவடைந்தது. இது போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை, நிவாரண பணிகள் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள 12 சிறப்பு குழுக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அமைத்திருந்தார். இந்த குழுக்களில் மொத்தம் 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர தலைமைச் செயலாளர் தலைமையில் தனி சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழுக்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது, மே 3-ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான இந்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
12 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுவினர் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவினரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? மேலும் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என நீங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அரசு செய்ய வேண்டிய பணிகள் என்ன? மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனைகளை சொல்லுங்கள். துறை வாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். காய்கறி சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. எவ்வளவு தூரம் எடுத்து சொன்னாலும் மக்கள் அதனை பின்பற்றுவதில்லை. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் கொரோனாவின் வீரியம் தெரியாமல் மக்கள் விளையாட்டுதனமாக இருக்கிறார்கள். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா தாக்கி கொத்து கொத்தாக பலியானதை டி.வி.யில் பார்க்கிறார்கள். அப்படி இருந்தும் அதனை உணரவில்லை. அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இப்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. எனவே அங்கெல்லாம் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. நமக்கு ஆரம்ப கட்டம் தான் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும். இல்லாவிட்டால் தடுக்க முடியாது. வெளிநாட்டில் கொரோனா வீரியத்தை முதலில் அவர்கள் உணர மறுத்தார்கள். எனவே தான் அங்கு பலி எண்ணிக்கை அதிகமானது. அதன்பின் தான் இதனை உணர்ந்தார்கள். எனவே இதனை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். போலீசாருக்கு இது கடுமையான பணி. சவாலான பணி. இரவு பகல் பாராமல் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். காவல்துறையினரும், உள்ளாட்சி துறையினரும் ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் வீதிவீதியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதனை எல்லாம் கடைப்பிடிக்காததால் தான் கொரோனா தாக்குதல் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை எல்லாம் மக்களிடம் உணர்த்த வேண்டும். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். ஆகவே நோயின் வலிமையை அறிந்து மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதன் பின் ஒவ்வொரு பணிக்குழு சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நேற்று இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின், இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதன் பின் மே 3-ம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீடிப்பதா? தளர்த்துவதா என்பது பற்றி முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப