எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.15 - தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களின் ஆய்வுக் கூட்டம் 14.6.2012 அன்று சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது: நடப்பாண்டில் கூட்டுறவின் மூலம் ரூ.4,000 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில் 7.6.2012 வரை ரூ.308.37 கோடி பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக் குறியீட்டை எய்திட ஏதுவாகவும், புதியவர்களுக்கு பயிர்க் கடன்களை வழங்கிடவும் திட்டமிட்டு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அதாவது பால்பண்ணை அமைத்தல், பண்ணை ஆடுகள் வளர்ப்பு, வெண்பன்றி, முயல் வளர்ப்பு மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு நடப்பாண்டில் ரூ.300 கோடி அளவிற்கு கடன் வழங்கிட குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 31.5.2012 வரையில் ரூ.26.54 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் பொருள்களின் மீது தானிய ஈட்டுக் கடன் பெற ஏதுவாக நடப்பாண்டில் ரூ.185 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 31.5.2012 வரையில் ரூ.15.06 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்ய மைய வங்கியியல் கணினி சேவை முறை செயல்படுத்த தக்க நடவடிக்கைகளை உடன் எடுத்து விரைவாக பணியை முடித்திட வேண்டும்.
மேலும் சட்டமன்றப் பேரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்தபடி, புறநகர் பகுதிவாழ் மக்களுக்கு கூட்டுறவு கடன் கிடைக்கும்வகையில் 25.5.2012 அன்று, கோவை மாவட்டத்தில் வேலாண்டிபாளையம், கணபதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவூர், கொளப்பாக்கம், அய்யப்பந்தாங்கல், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களாக செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் 78 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் 22 நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் நவீனமயமாக்கப்படும் என அறிவித்ததிற்கிணங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் விரைந்து நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதேப்போன்று, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக 27 புதிய கிளைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெரும்பான்மையான மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பு கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும்.
அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, 41 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாழ்திறனை மேம்படுத்த தலா ரூ.50 இலட்சம் வீதம் மானிய வட்டி விகிதத்தில் சிறப்புக் காசுக் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் வாழ்திறனை உயர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நடப்பாண்டில் முறையே ரூ.2400 கோடி, ரூ.590 கோடி மற்றும் ரூ.950 கோடி வைப்புத்தொகையாக திரட்ட குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை எய்திட வங்கிகளின் தனி அலுவலர்களும், செயலர்களும் ஈடுபாட்டுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டனர்.
நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க 50 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 16 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கும் 52 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இரும்புப் பெட்டகங்கள் நிறுவுவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூட்டுறவு வங்கிகள் கடன்களை வழங்குவதுடன் மட்டுமன்றி, கொடுத்த கடன்களை கடன்தாரர்களிடமிருந்து தவணை காலத்திற்குள் வசூலித்து, சிறப்பாகச் செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வணிக வங்கிகளுக்கு இணையாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 31.12.2012க்குள் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினிமயமாக்கும் பணி முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும், கிடங்குகள் கட்டுதல், அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில், பொது விநியோகத் திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றுவதில் கூட்டுறவுகளின் பங்கு மகத்தானது. எனினும், அரிசி நுகர்வு அதிகம் உள்ள கடைகளில் தீவிர ஆய்வு செய்து, அரிசி கடத்தலைத் தடுத்திடுமாறும், உண்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தின் போது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், சட்டப்ர்வ நிதிகளுக்கு ரூ.54.60 இலட்சத்திற்கான காசோலைகளை அமைச்சரிடம் வங்கியின் தனி அலுவலர் சா.கரிகாலன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அண்ணாமலை, மற்றும் கூடுதல் பதிவாளர்கள் க.பு.பெ.பன்னீர்செல்வன், அசோகன், அ.சங்கரலிங்கம், இரா.ராஜேந்திரன், கே.பாலசுப்பிரமணியம், எம்.ப்பி.சிவனருள், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.