முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 3,616 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதாரத்துறை தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நேற்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று  65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1636 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 45889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 2,413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 71,116 பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து