எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.2 - இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் கொள்ளையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது என்று ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் அடைந்த வேதனைகளையும்சென்னை பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பட்டியலிட்டார்.
மேலும், வன்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் ரவுடிகளாக உள்ளதால், மக்கள் படும் வேதனைகளையும் எடுத்துரைத்தார். இதற்கு மாற்றம் காண, நல்லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுமென்று பொதுமக்களை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரச்சாரம் செய்தார்.
நேற்று பகல் 2.15 மணியளவில் போயஸ் தோட்டத்திலிருந்து பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதியோ தி.மு.க - அ.தி.மு.க. சாதனைகளை ஒப்பிட்டு, வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். எனது ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்று நீதிநிலைநாட்டப்பட்டு, பாதுகாப்பு அளித்து, ரவடித்தனத்தை முற்றிலும் ஒழித்தேன். இன்று காவல் துறை ரவுடிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
சென்னை மாநகரம் கதிகலங்கி, அமைதியற்ற நகரமாகியுள்ளது. இன்றைய தி.மு.க. கவுன்சிலர்கள் பெருமளவில் ரவுடிகளாக உள்ளார்கள். இவர்கள் உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. வன்முறையின் மூலம் வெற்றிப்பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களால் நீங்கள்படும் வேதனையை அறிவேன்.
சட்ட கல்லூரி மாணவர்கள் மோதலில் போலீசார் வேடிக்கை பார்த்தது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தமிழக காவல் துறை முன்னிலையில் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டனர்.
பத்திரிகை ஊழியர்கள் மூன்று பேர் பலியான சம்பவம், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நிறைய சட்ட ஒழுங்கு சீர்ழிவு அதிகம் அதற்கு, ஒருசில எடுத்துக்காட்டுதான் இது. சினிமாவில் வரும் வன்முறை காட்சி நிஜமாகவே நடக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்ழிந்து கொண்டிருக்கிறது.
அடுத்த பிரச்சனை மின்வெட்டு, எனது ஆட்சிக்காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மின்சாரம் சீராக வந்தது. உபரி மின்சாரம் பிறமாநிலங்களுக்கு விற்கப்பட்டு, வருவாய் லாபம் ஈட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்வெட்டு அமுலில் உள்ளது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களிடம் கை ஏந்தவிட்டார் கருணாநிதி. தேவைக்கு அதிகமாக நிலகரியை இறக்குமதி செய்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார் கருணாநிதி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். எனது ஆட்சிக்காலத்தில் கடத்தல், பதுக்கல் தடுக்கப்பட்டது. விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது. கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்று விலை உயர்வால், மக்கள் செய்வது அறியாமல் திண்டாடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், கடந்த 5 ஆண்டுக்காலமாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறீர்கள். தமிழகம் எனது ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்தது. மின்மிகை மாநிலமாக இருந்தது. புதிய வீரானம் திட்டம் மூலம் உங்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு வித்திட்டேன். குடிநீர் பிரச்சனையை தீர்த்து, உங்களது பிரச்சனைகளை தீர்த்தேன். எனது ஆட்சியோடு, கருணாநிதியின் ஆட்சியின் வேதனையை ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள்.
இந்த தேர்தல் வெறும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.
தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதிக்கு மக்கள் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை. அனைத்து நிலங்களும் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கருணாநிதி குடும்பத்தினர் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டது. மைனாரிட்டி தி.மு.க ஆட்சியால் தலைக்குனிவிற்கு தமிழகம் ஆளாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரை விரட்டி அடிக்க வேண்டும்.
கருணாநிதிக்கு சொத்து குவிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆசிய பணக்காரர்களில் ஒருவராக வந்துவிட்ட பி ன் உலக பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கருணாநிதி இருக்கிறார். தமிழக மக்களே நீங்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றபிரச்சனைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ரவுடிகளின் அட்டகாசத்தால் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு குடும்பம் வாழ்கிறது. ஆறு கோடி குடும்பங்கள் வாழ தமிழக மக்கள் எம்.ஜிஆரின் பொற்கால ஆட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக 1 லட்சத்து 80 கோடி கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலத்தில் இமாலய ஊழல் சாதனை புரிந்துள்ளார். இந்த பிரச்சனையால் சிறுபான்மையை சேர்ந்த சாதிக் பாஷா உயிர் பறிக்கப்பட்டது. தலித்தின ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் கருணாநிதி குடும்பம் ஊழல் இல்லை என்று மக்களை ஏமாற்றி சாதனை சாதனை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழக மக்களே. கடந்த 1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையனை வெளியேறு, போராட்டம் நடந்தது. இப்போது தமிழகத்தில் என் தலைமையில் கொல்லையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது. தேர்தல் நாள் அன்று ஜனநாயக கடமையாற்ற அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறவேண்டும். கருணாநிதி தமிழக மக்களை விரட்டி, தமிழகத்தை தன் குடும்பம் வசம் ஆக்கிவிட நீங்கள் விடாதீர்கள். இந்த தேர்தலில் நீங்கள் அவர்களை விரட்டி அடிக்கவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலஇந்திரா, அம்பத்தூர் வேட்பாளர் வேதாச்சலம், பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜா, மாதவரம் தொகுதி வேட்பாளர் மூர்த்தி, கும்மிடிப்பூண்டி தே.மு.தி.க. வேட்பாளர் சேகர், மதுரவாயல் பீமாராவ், வில்லிவாக்கம் வேட்பாளர் ஏ.சி.டி.பிபாகரன், எழும்பூர் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.