எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.2 - மேலூர் தாசில்தார் மீது மு.க. அழகிரியின் முன்னிலையில் தி.மு.க.வினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து மதுரை மற்றும் மேலூரில் வருவாய்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வருகின்ற 13-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மத்திய மந்திரியும் தென்மாவட்ட தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரி, தென்மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக தனது ஆதரவாளர்களுடன் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து மிரட்டி அவர்களுக்கு பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி தி.மு.க. வுக்கு ஓட்டுப்போட சொல்லி நிர்ப்பந்தம் செய்து வருகிறார். பல கிராமங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தி.மு.க.வினர் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற மு.க. அழகிரி தீவிர முஸ்தீப் செய்து வருகிறார். ஆனால் அழகிரி மற்றும் தி.மு.க.வினரின் தேர்தல் விதி மீறல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்காணித்து அதனை தடுக்க பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத்தூவி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு மு.க. அழகிரி பகிரத முயற்சி செய்து வருகிறார். இதனால் அவரை கட்டுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் மு.க. அழகிரிக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை நேற்று முன்தினம் திடீரென வாபஸ் பெற்றது. இதனால் தி.மு.க.வினர் மத்தியில் ஒரு திடுக் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ராஜமாணிக்கத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் நேற்று மத்திய மந்திரி மு.க. அழகிரி மேலூர் தொகுதியில் உள்ள 50 கிராமங்களை உள்ளடக்கிய வெள்ளலூர் நாடு பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்குள்ள ஒரு கிராமமான அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடையார் கோயிலுக்கு அங்குள்ள அம்பலக்காரர்களில் வரவேற்புக்கு இணங்க மு.க. அழகிரி நேற்று சென்றார். அவருடன் மதுரை மாநகராட்சி துணைமேயர் பி.எம். மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெகுபதி, நகர செயலாளர் இப்ராகீம் சேட், ஒத்தப்பட்டி தி.மு.க. பொறுப்பாளர் திருஞானம் உள்ளிட்ட பலரும் சென்றனர். கோயில் பூஜாரி சாமிக்கு தீபாராதனை காட்டி மு.க. அழகிரிக்கு விபூதி வழங்கினார். விபூதியை எடுத்துக்கொண்ட மு.க. அழகிரி தீபாராதனை தட்டில் ரூ. 100 ஐ எடுத்துப்போட்டார். இதனை கண்காணிக்க சென்ற மேலூர் தாசில்தார் காளிமுத்து அவருடன் சென்ற வீடியோர் கிராபர் அந்த சம்பவத்தை வீடியோ படம் எடுத்தார். இதனை கவனித்துக்கொண்டியிருந்த மு.க. அழகிரி, வீடியோ படம் எடுக்கக்கூடாது. வெளியே செல்லுமாறு முகத்தை சுண்டி கண்டித்துப்பேசினார். வீடியோ கிராபரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். உடனே மு.க. அழகிரியின் அருகில் இருந்த தி.மு.க.வினர் வீடியோ கேமிராவை பிடுங்க முயற்சித்தனர். உடனே வீடியோ கிராபர் கேமிராவை அருகே இருந்த தாசில்தார் காளிமுத்துவிடம் ஒப்படைத்தார். இதனை கண்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தாசில்தார் மீது பாய்ந்து கேமிராவை பிடுங்க முயற்சித்தனர். அப்போது தாசில்தாருக்கும் தி.மு.க.வினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதனிடையே துணைமேயர் பி.எம. மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் உள்ளிட்ட அழகிரியின் ஆதரவாளர்கள் தாசில்தார் காளிமுத்துவை சரமாரியாக தாக்கினர். இதில் தாசில்தார் காளிமுத்து ஊமைக்காயம் அடைந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணைக்காணிப்பாளர் மணிவண்ணன்,போலீசாருடன் புகுந்து தாசில்தார் காளிமுத்துவை தி.மு.க. வினரின் பிடியில் இருந்து காப்பாற்றி கோயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து அனுப்பி வைத்தார்.
தாசில்தார் காளிமுத்து, மு.க. அழகிரி ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. இந்த சம்பவத்தை கண்டித்து தாசில்தார் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மேலூர் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் வேலையை புறக்கணித்து அலுவலகம் முன்பு ஜெயபாண்டி, சிவதாணு, காட்டுவா, மலையாண்டி, ரேவதி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டியிருந்த வருவாய் துறை அலுவலர்களும் ஊழியர்களும் கொதித்து எழுந்தனர். பணியை புறக்கணித்துவிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஞான குணாளன் தலைமையில் தாசில்தார் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடிவதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் தேர்தல் பணி புறக்கணிப்பு போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று ஞானகுணாளன் அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் சகாயத்திடம் மனுவும் கொடுக்கப்பட்டது.
இதனிடையே தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தாசில்தார் காளிமுத்து மேலூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் பி.எம். மன்னன், ரெகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் மற்றும் அடையாளம் தெரியாத தி.மு.க.வினர்களை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.