எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.2 - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று (ஏப்.1) மதியம் சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழியெங்கும் அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி பார்வேர் பிளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உட்பட கூட்டணிக் கட்சிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 234 இடங்களில் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
கடந்த மாதம் 4-ந் ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரம் தொடங்கிய ஜெயலலிதா, நேற்று முன்தினம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்தார். சென்னையில் நேற்று முதற்கட்டமாக அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மதியம் ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக நுங்கம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா புஷ்பாநகரில் பொதுமக்களிடையே பேசினார்.
பின்பு நெல்சன் மாணிக்கம் சாலை, சூளைமேடு, மேத்தாநகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.ஏ. வழியாக வாக்கு சேகரித்த ஜெயலலிதா சூளைமேடு எம்.எம்.டி.ஏ. மார்க்கெட்டில் அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திராவிற்காக வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவருக்கு மகளிர் அணியினர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். பிறகு கோயம்பேடு, திருமங்கலம், நூறடி சாலை வழியாக அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வேதச்சாலத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன் பிறகு பாடி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். வில்லிவாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் கொடிகளையேந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்பு கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் பகுதியில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா அயனாவரம் பஸ்நிலையம் அருகே கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அதன்பிறகு பொடிக்கடை நம்மாழ்வார்பேட்டை வழியாக ஓட்டேரி பாலம் அருகே ஜெயலலிதா வந்தபோது அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கையில் இரட்டை இலை சின்னத்தையும், கட்சிக்கொடியையும் உற்சாகமாக காண்பித்தனர். கூட்டணி கட்சியினரும் கொடியுடன் வந்து ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரட்டை இலைக்கே எங்கள் வாக்கு, அ.தி.மு.க. அமோக வெற்றிபெரும் என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
அதன் பிறகு ஓட்டேரி பிரிட்ஜ்கேஸ் சாலை வழியாக ஓட்டேரி மேகலா தியேட்டர் அருகே எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு போயஸ் இல்லத்திற்கு திரும்பினார்.
இந்த பிரச்சாரத்தில் தலைமை நிலையச்செயலாளர் செங்கோட்டையன், அமைப்பு செயலாளர் மு.தம்பித்துரை, வடசென்னை மாவட்ட செயலாளரும், ராயபுரம் தொகுதி வேட்பாளருமான டி.ஜெயக்குமார், வேட்பாளர்கள் ஆயிரம் விளக்கு-வளர்மதி, அண்ணாநகர்-கோகுல இந்திரா, தி.நகர்-கலைராஜன், துரைமுகம்-பழக்கருப்பையா, சேப்பாக்கம்-அமிமுன்அன்சாரி, மைலாப்பூர்-ராஜலட்சுமி, திரு.வி.க.நகர்-நீலகண்டன், ஆர்.கே.நகர் வெற்றிவேல், திருவொற்றியூர் -குப்பன், வில்லிவாக்கம்-ஜே.சி.டி. பிரபாகரன், கொளத்தூர்-சைதை துரைச்சாமி, பெரம்பூர்-சி.பி.எம். வேட்பாளர் ஆ.செளந்தர்ராஜன் எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. கு.நல்லதம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி வேட்பாளருமான செந்தமிழன், திருவள்ளூர்-ரமணா, மாதவரம்-மூர்த்தி, பொன்னேரி -ராஜா, அம்பத்தூர் - வேதாச்சலம், பூந்தமல்லி-மணிமாறன், திருத்தணி-தே.மு.தி.க.-சுப்பிரமணியன், கும்மிடிப்பூண்டி-சேகர், மதுரவாயல்- சிபிஎம் வேட்பாளர் பீம்ராவ் உட்பட ஏராளமான முன்னணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிரச்சாரம் ஆரம்பித்த நுங்கம்பாக்கம் சாலையில் இருந்து பிரச்சாரத்தை முடித்த எழும்பூர் தொகுதி பிரிக்கிளின் சாலை வரை வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள், பெண்கள், இளம் தலைமுறையினர் வழிநெடுக நின்று ஜெயலலிதாவை பார்த்து இரட்டை விரலை காட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அனைத்து இடங்களிலும் மகளிர் அணியினர், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை அமைப்பினர், கூட்டணி கட்சி தொண்டர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரச்சார பகுதியில் பொதுமக்களிடையே இந்த முறை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டே தீரவேண்டும் என்று பேசிக்கொண்டனர்.
நேற்று காலை வெளியான லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற செய்திபற்றி பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாகமாக பேசிக்கொண்டனர். ஓட்டேரி பகுதியில் அப்பளத்தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன், பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவியுடன் 4 கிராம் தங்கம், மாணவர்களுக்கு லேப் டாப், விலைவாசி உயர்வை தனது அரசு வந்தால் கட்டுப்படுத்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து சென்னை மாநகரை ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பேன் என்று ஜெயலலிதா பேசியது பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பையும், கரகோசத்தையும் பெற்றுத்தந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்38 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 3 hours ago |
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்
15 May 2024புதுடெல்லி : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: ஆந்திராவில் 6 பேர் உடல் கருகி பலி
15 May 2024அமராவதி : ஆந்திராவில் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
15 May 2024புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.