எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்திற்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.10,774கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் என்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்ககுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் 12.10.2020 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 42-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற தொடர்ச்சி கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:-
மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்தான விவகாரத்திற்கு ஒரு சுமூக முடிவினை காண்பதற்கு தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
27.8.2020 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க மத்திய நிதியமைச்சகம் ஒரு விளக்கக் குறிப்பு ஒன்றினை மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டது.
அதில், இழப்பீடு தொடர்பாக ஏற்படக்கூடிய பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பான முறையினை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் முடிவு செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் இது தொடர்பான தனது கருத்தினை வழங்கியுள்ளார். மேலும் அவர் மாநிலங்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து வரப்பெற்ற விளக்கக் குறிப்பில் இழப்பீடு தொகையினை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்தான பல வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதில், மத்திய அரசு கடன் பெற்று இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்பது ஒரு வழிமுறையாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக அவ்வாறு மத்திய அரசால் கடன் பெறுவது சாத்தியமில்லை என அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால், இரண்டு விருப்பத் தேர்வுகள் மட்டும் வழங்கப்பட்டன. அவ்விரண்டு விருப்பத் தேர்வுகளிலும், மாநிலங்கள்தான் கடன் பெற்றாக வேண்டிய வழிமுறை குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசுதான் கடன் பெற்று மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் விருப்பத் தேர்வு ஏற்கப்படவில்லை. மத்திய அரசுதான் கடன் பெற வேண்டும் என நானும் அந்த நேரத்தில் வேண்டுகோள் வைத்திருந்தேன். முதலமைச்சரும் இப்பொருள் குறித்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கடன் பெற்றுதர முன் வராத காரணத்தினால், முன்வைக்கப்பட்ட இரண்டு விருப்பத் தேர்வுகளில் ஏதேனும் ஒரு விருப்பத் தேர்வினை மட்டுமே தமிழகம் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று நிலவி வரும் இந்த தருணத்தில், ஒருமித்த கருத்து எட்டப்படவேண்டும் என்பதில் தமிழக அரசு கவனம் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் இதற்கு முன் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் 1-ஆம் விருப்பத் தேர்வினை ஏற்க வேண்டியிருந்தது. இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வு கண்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியினை வழங்கினால், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் பொருளாதாரத்தை உடனடியாக புதுப்பிக்க இயலும். சென்ற வாரம் ரூ.1483.96 கோடி இழப்பீட்டு தொகையாக தமிழகத்திற்கு வழங்கியமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜூலை, 2020 முடிய தமிழகத்திற்கு வரப்பெறவேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ.10774.98 கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
2017-2018 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு நிலுவைத் தொகையான ரூ.4321 கோடியை தமிழகத்திற்கு விரைவில் வழங்கிட உறுதியளித்துள்ள மன்றத் தலைவருக்கு இத்தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.