எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஆக.7 - தி.மு.க. ஆட்சியில் டாமின் சுரங்கத்தில் மு.க.அழகிரி மகனின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொள்ளை அடித்துள்ளது. வீடியோ ஆதாரத்துடன் திருட்டு அம்பலம் ஆகி உள்ளது. மு.க.அழகிரி மகன் தயாநிதிஅழகிரி ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த 2007-ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனத்தின் இயக்குனராக தயாநிதி அழகிரி மற்றும் ந.நாகராஜன் ஆகிய இருவரும் இருந்தனர். இந்த நிறுவனம் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவு கிராமத்தில் பொக்கிஷ மலை அருகே டாமின் சுரங்கத்தின் அருகில் இடம் வாங்கி 2008-ம் ஆண்டு கிரானைட் சுரங்கம் தோண்ட அரசிடம் அனுமதியும் பெற்றனர். 2008-ம் ஆண்டே சுரங்கம் எந்த இடத்தில் தோண்ட போகிறோம் என்பதை குறிப்பிடும் MINING PLAN-க்கும் அனுமதி பெற்றனர்.
தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2009-2010-ம் ஆண்டில் சுமார் 165 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையும் 2010-2011-ம் ஆண்டில் சுமார் 1865 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையை செலுத்தி பெர்மிட் போட்டு கற்களை குவாரியை விட்டு வெளியே அனுப்பியதாக இந்த நிறுவனம் கணக்கு காண்பித்துள்ளது.
அதிர்ச்சி தகவல்
அதிர்ச்சி தகவலாக தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் MINING PLAN- படி அவர்கள் இடத்தில் சுரங்கமே தோண்டவில்லை. ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுரங்கமே தோண்டாமல் தொடர்ந்து கிரானைட் கற்களை மட்டும் அவர்கள் இடத்தில் வைத்துக் கொண்டே இருந்தனர். இதை ஆராயும் போது டாமின் சுரங்கத்தில் திருடுவதற்காகவே டாமின் சுரங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தை இவர்கள் வாங்கி தொடர்ந்து டாமின் சுரங்கத்தில் இருந்து கற்களை திருடி வந்துள்ளனர்.
டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்திற்கு கிரானைட் கற்களை கடத்தி வைத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் தினபூமி வசம் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாளில் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 225 கியூபிக் மீட்டர் கொண்ட 15 பெரிய கேங்சா கற்கள் கடத்தப்பட்டுள்ளன. தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில் ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை காணவில்லை.
ஆட்சியை மீண்டும் தி.மு.க. பிடிக்க முடியாது என்று தெரிந்த உடன் 2011-ம் ஆண்டு ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்தில் சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். இவர்களின் இடத்தில் பெரும்பாலும் கிராவல் மண் மட்டுமே இருந்தது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒலம்பஸ் சுரங்கத்தையும் டாமின் சுரங்கத்தையும் சட்டவிரோதமாக இணைத்துவிடுகிறார்கள். டாமின் பாதுகாப்பு இடைவெளி பகுதியையும் தோண்டினார்கள். இதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. சுரங்கத்தின் உள்ளே சென்று வேலை பார்க்கும் நேரத்தில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தொழில்துறை அமைச்சர் வேலுமணி சட்டசபையில் மு.க.அழகிரி சம்பந்தமாக பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் தன்னுடைய மகன் பெயரில் உள்ள கிரானைட் சுரங்கம் நடைபெற்றதை மறைத்துவிட்டார். இதை தொடர்ந்து மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் அடித்த கொள்ளையை அதிகாரிகள் மறைத்துவிட்டதால் பாதுகாப்பு இடைவெளியில் சுரங்கம் தோண்டியதாக SHOW CAUSE நோட்டீசுக்கு பதில் அளித்த ஒலம்பஸ் நிறுவனம் டாமின் நிறுவன கிரானைட் சுரங்கத்தின் பாதுகாப்பு இடைவெளியை நாங்கள் தோண்டவில்லை என்று முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கும் விதமாக பதில் அளித்தனர். இதன் பின் சுரங்கம் தோண்டுவது நிறுத்தப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் கடந்த 20.7.2010-ம் தேதியன்று ரூ.1500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் என்ற தலைப்பில் தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து 21.7.2010-ம் தேதியன்று அதிகாலை தினபூமி நாளிதழில் ஆசிரியர் S.மணிமாறன் மற்றும் பத்திரிகையாளரும் அவரது மகனுமான M.ரமேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அடுத்த நாளே அவசர அவசரமாக சிறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். தி.மு.க. அரசின் ஊழல்களை தொடர்ந்து செய்தி வெளியிட்டதால் மேலும் 5 பொய் வழக்குகளை தி.மு.க. அரசு தொடர்ந்தது. இதை கண்டித்து அ.தி.மு.க. பொது செயலாளரும் தற்போதைய முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் வாங்க கோரி கண்டன அறிக்கையும் வெளியிட்டார்.
மு.க.அழகிரி-மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தில் தினபூமி ஆசிரியர் மீது கைது-பொய் வழக்குகள்
தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த கைது, பொய்வழக்குகள் ஆகியவற்றிற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்ட ரூ.1500 கோடி மதிப்புள்ள கற்கள் அனைத்தும் டாமின் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து P.R.P. நிறுவனத்தால் கடத்தி வைக்கப்பட்டவைதான். இந்த திருட்டை கண்டு பிடிக்க தினபூமி நாளிதழ் ஒரு மாபெரும் புலனாய்வு வேட்டையை நடத்தியது. இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கம் அருகே ஏராளமான ரகசிய காமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பல மாதங்கள் நடந்த இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து P.R.P. நிறுவனம் P.R.P. நிறுவன லாரிகளில் டாமின் முத்திரை இல்லாமல் கிரானைட் கற்களை கொள்ளை அடித்து P.R.P. நிறுவன இடத்திற்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. P.R.P. நிறுவனம் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து சராசரியாக தினமும் ரூ.2 கோடி மதிப்புள்ள 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை கடத்தியது. இதற்கு ஆதாரமும் தினபூமியிடம் உள்ளது. இதே தவறைத்தானே மு.க.அழகிரி மகன் நிறுவனமும் செய்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தின் காரணமாகவே இந்த கைது நடவடிக்கையும் பொய் வழக்குகளும் என்பது புலனாகிறது.
தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் டாமின் சுரங்கத்தில் திருடிவிட்டு தி.மு.க. ஆட்சி முடிந்த உடன் பழைய தேதியில் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக கூறி திருட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயம்
தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில் ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயமாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .