எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 4 - தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு மதுரை கலெக்டருக்கு எதிராக பொய் புகார் கொடுத்த கோட்டாட்சியரை அதிரடியாக தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்துள்ளது. இதேபோல், மதுரையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட உளவு பிரிவு உதவி கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் குத்துவெட்டுக்கள் காரணமாக பிரச்சாரம் செய்வதிலும், வேட்பாளர் பெயர் அறிவிப்பதிலும், ஏகப்பட்ட குளறுபடி காரணமாக தாமதமாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். மறுபுறம் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாகாமல் தடுப்பதற்காக உளவு பிரிவு முதல் பல்வேறு பொய் பிரச்சாரங்களை தி.மு.க. பயன்படுத்தியது. இவை அனைத்தையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றிகரமாக அமைந்து கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கினறனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் இடைத்தேர்தல், ஜனநாயகத்திற்கு சவால் விடப்பட்டு வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடந்த தேர்தல் இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தி.மு.க.வினர் காங்கிரஸ் உதவியோடு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த காரணத்தினால் அராஜகமான தேர்தல்களை நடத்தி குறுக்கு வழியில் வெற்றியும் பெற்றனர்.
தமிழகத்தின் நேர்மையான தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா தேர்தலில் தில்லுமுள்ளு செய்த தி.மு.க.வினர் மேல் நடவடிக்கை எடுக்க முனைந்தபொழுது கருணாநிதி தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை பகீரங்கமாக மிரட்டும் சம்பவமும் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தை நீதிமன்றமே கண்டிக்கும் அவல நிலையும் நடந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க.வினர் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அனைத்து மட்டங்களிலும் நடந்தது. காவல் துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கருணாநிதி குடும்பத்தின் கடைக்கோடி உறவினர்களுக்குக்கூட பயந்து சலாம் போடும் நிலை இருந்தது. தென் மாவட்டங்களில் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. தென் மாவட்டங்கள் முழுவதும் சிற்றரசர் போல் அழகிரி வலம்வந்தார். தேர்தலில் தில்லுமுல்லு செய்து வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணத்தை லஞ்சமாக கொடுத்து வாக்குகளை கைப்பற்றும் திட்டத்திற்கு ``அழகிரி பார்முலா'' என்று தி.மு.க.வினர் பெருமையாக சொல்லிக்கொண்டனர்.
இந்த தேர்தலில் இத்தகைய நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம் ஆரம்பம் முதலே தமிழக சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கட்சி தலைவர்களையும் கூட்டிய தேர்தல் ஆணையம் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய முறைகள், தவிர்க்கவேண்டிய முறைகள், நேர்மையாக தேர்தல் நடத்த ஒத்துழைக்கும் படி அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டது. அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.
தி.மு.க.வினர் வழக்கம்போல் காவல்துறை, கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் நமக்கு சாதமாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தெம்பாக தங்களுடைய திருமங்கலம் பார்முலாவை அமுல் படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். அதற்கு வசதியாக தமிழக டிஜிபி, உளவுப்பிரிவு தலைவர், தமக்கு வேண்டிய மாவட்ட கலெக்டர்களை பயன்படுத்தவும் செய்தனர். இது பற்றி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். காவல் துறை தலைவர், உளவுப்பிரிவு தலைவர், குறிப்பிட்ட கலெக்டர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்தனர். அந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் அதிரடியாக காவல்துறை டிஜிபி, உளவுபிரிவு தலைவர், பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களை மாற்றியது. அப்படி மாற்றியதில் முக்கியமான மாற்றமாக அழகிரிக்கு ஜதகமாக செயல்பட்டு வந்த கிரானைட் ஊழல் பற்றி துளியும் கண்டுகொள்ளாத மதுரை கலெக்டர் காமராஜ் மற்றும் காவல்துறை ஆணையர் பாரி ஆகியோரும் அடங்குவர். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் கடுமையான வாகனச்சோதனைகளை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பிடித்தது.
இந்த நடவடிக்கைகளால் மிரண்டு போன கருணாநிதி குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்தார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் ஜெயிக்க வைப்பதற்கு ஆணையம் துணை போவதாக அறிக்கை விட்டார். தமிழகத்தில் மெர்ஜென்சி நிலவுவதாக அறிக்கை விட்டார். தேர்தலை தனது இஷ்டப்படி தனது ஜால்ரா காவல்துறை அரசு அதிகாரிகளை வைத்து பணத்தை தண்ணீராக இரைத்து ஜெயித்து விடலாம் என்ற கருணாநிதியின் கனவு தேர்தல் தேர்தல் கமிஷனின் இத்தகைய நடவடிக்கைகளால் உடைந்து போனது.
இது பற்றி ஆவேசமாக அறிக்கை விட்டு நீதிமன்றத்தில் வேண்டியப்பட்டவர்களை வைத்து வழக்கும் போடவைத்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக அமைந்தது. மதுரையில் நேர்மையான கலெக்டரான சகாயத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. சகாயம் நேர்மையான நடவடிக்கையில் பேர்போன கலெக்டர். துளியும் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாதவர். அவருடைய நேர்மையான நடவடிக்கைகள் அழகிரியின், மதுரை மாவட்ட தி.மு.க.வினர் செயல்பாடுககளுக்கு பெரும் இடையூராக இருந்தது.
இதனால் மாவட்ட கலெக்டருக்கு எதிராக அழகிரி அறிக்கைவிட்டார். அடிபொடிகளை வைத்து அறிக்கைகள் விட்டார். ஆனாலும் மதுரையில் இவர்களுடைய பாச்சா பலிக்கவில்லை. நினைத்தபடி பணபட்டுவாடாவை நடத்த முடியவில்லை. மதுரையில் மட்டும் தமிழ்நாட்டிலேயே அதிக தொகையை ரூ.3.8கோடியை வாகன சோதனையில் அதிகாரிள் பிடித்தனர். இதனால் மதுரை கலெக்டரை எப்படியாவது மாற்றவேண்டும் என்று அழகிரி தனக்கு வேண்டியப்பட்ட தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த சுகுமாறன் என்ற கோட்டாட்சியர் மூலம் மதுரை கலெக்டர் சகாயத்திற்கு எதிராக பெரிய புகாரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் அளிக்க வைத்தனர்.
தன்னை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சகாயம் தூண்டுவதாகவும், தனக்கு அதனால் மனஉலைச்சல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், கூறி மருத்துவமனையில் சென்று சுகுமாரன் படுத்துக்கொண்டார். கோட்டாட்சியர் சுகுமாரன் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை குடும்ப தொலைக்காட்சி முதல் பல்வேறு செய்திதாள்களில் வெளி வந்தது. அழகிரி ஒரு படி மேலே போய் உள்துறை செயலாளரிடம் மாவட்ட கலெக்டரை பற்றி புகார் அளித்தார்.
இதனிடையே இந்த புகார்களை மறுத்த கலெக்டர் சகாயம் தான் கோட்டாட்சியரை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கூறவில்லை என்று மறுத்தார். கோட்டாட்சியர் சுகுமாரனின் புகார் உள்நோக்கம் கொண்டது என்ற உண்மையை புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிரடியாக கோட்டாட்சியர் சுகுமாரனை, மதுரை கிழக்கு பகுதியில் இருந்து மாற்றல் செய்து வேறு மாவட்டத்தில் உடனடியாக நியமிக்கும்படி உத்தரவிட்டது.
மேலும் தமிழகத்தில் உளவு பிரிவு தலைவர் ஜாபர்சேட் தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு வேலை பார்த்ததினால் அவரை மாற்றியது போல் மதுரை மாவட்டத்தில் உளவுபிரிவு உதவி கமிஷனராக இருந்த குமாரவேல் என்பவர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்படுவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் உளப்பிரிவு உதவி கமிஷனர் குமாரவேலும் நேற்று அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகளால் மதுரை பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மதுரையில் இனி நேர்மையான தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிப்பதை பார்வையிட வந்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இந்த சம்பவம் பற்றி கூறுகையில் கோட்டாட்சியர் சுகுமாரனை தற்காலியமாக மாற்றம் செய்துள்ளோம். விசாரணை செய்து உண்மையினை கொண்டு வருவோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
06 May 2024அணிகள் போட்டிகள