எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம், ஆக.10 - காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கல்லூரி தலைவர் ஜேப்பியாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மருமகனும், கல்லூரியின் இயக்குநருமான மரியவில்சன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் ஜேப்பியார் கல்வி நிலையங்களில் ஒன்றான ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற என்ஜீனியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்ததில் வடமாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை தொடர்பாக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் உள்ள ஜேப்பியார் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரியை பிரபல கல்வியாளர் ஜேப்பியார், அவரது மருமகன் மரியவில்சன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்க கட்டிடம் கட்டும் பணி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டுவது குறித்து குன்னம் உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெறவில்லை. உள்விளையாட்டு அரங்கம் கட்டுவது குறித்து உரிய முறையில் தேர்ச்சிப் பெற்ற கட்டிட அமைப்பு இன்ஜினியரிடம் வரைபடம் எதுவும் பெறப்படவில்லை. முன் அனுபவம் இல்லாத தங்களது கல்லூரியில் படித்த ஒரு சில இன்ஜினியர்களை பணிக்கு அமர்த்தியும், வடமாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு வந்த கட்டுமான பணியில் அனுபவமில்லாத நபர்களை ஏஜென்ட்டுகள் மூலம் பணிக்கு அமர்த்தியும் கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளனர். மேலும் ஸ்திர தன்மைக்கு (பலம்) குறைவான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியதும், ஸ்திர தன்மைக்குத் தேவையான கால அவகாசம் கொடுக்காமல் தொடர்ந்து கட்டுமான பணியை விரைந்து முடிக்க முயன்றதாலும் இந்த சம்பவம் நடந்து பல உயிர் இழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும் விசாரணையில் வடமாநிலத்தவர்களை ஏஜென்டுகள் மூலம் குறைந்த கூலிக்கு பணிக்கு அமர்த்தியும், பணியாளர்களின் தினக்கூலியிலிருந்து கணிசமான தொகையை கமிஷனாக பெறப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 6.8.2012 அன்று மாலை சுமார் 3.30 மணி அளவில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. பிறகு சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்து சின்னா பின்னமானது. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் கதறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். அப்போது அசாம் மாநிலம் காசியாலா பகுதியைச் சேர்ந்த தப்பா (25), மிந்து (30), ஒடிஷா மாநிலம் பந்தாலா பகுதியைச் சேர்ந்த முந்து (25), சங்கர் (25), பாகுலு (30), புகாலிபீடா பகுதியைச் சேர்ந்த பிஸ்வாம்பத்ரா (30) உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து பிணமாக கிடந்தனர். அவர்களுடைய பிணங்களை போலீசார் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (20), சத்ருகான் (38), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரங்காய் (24), கஸ்பர் மகன் பைசால் (28), நரேன், வினோத் ஆகிய 6 பேரை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சாகர், சத்ருகான், ரங்காய் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பைசால், நரேன், வினோத் ஆகிய 3 பேர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஸ்பர் மகன் பைசால் (28) என்பவர் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த மேலும் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இத்துயர சம்பவத்திற்கு காரணமான ஜேப்பியார் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் இயக்குநரும், ஜேப்பியாரின் மருமகனுமான மரியவில்சன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கட்டுமான இன்ஜினியர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த அருள் ஜெயஅப்ரோஸ் (28), ராஜ்குமார் (28), வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்த ஏஜென்ட் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சுதானந்தன் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பிறகு இவர்கள் 4 பேரும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அப்துல்மாலிக் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கட்டிடம் கட்ட உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து உரிய முன் அனுமதி பெறாமலும், அனுபவம் உள்ள தேர்ந்த என்ஜினியர்களை வைத்து கட்டிடம் கட்டாமலும், கட்டிடம் கட்டும் இடத்தின் மண் பரிசோதனையை செய்யாமலும், ஸ்திர தன்மையுள்ள கட்டுமான பொருட்களை பயன்படுத்தாதனாலும், கட்டுமான பணியின் ஒவ்வொரு நிலையிலும் போதுமான கால அவகாசம் அளிக்காததாலும், அவசர அவசரமாக இந்த பெரிய கட்டுமான பணியை அலட்சியமாக கல்லூரி நிர்வாகம் செய்ததனால்தான் இந்த பெரிய விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு போலீஸ் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கல்லூரியின் தலைவரும், பிரபல கல்வியாளருமான ஜேப்பியாரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் துணை சூப்பிரண்டு ஆர்.கஜேந்திரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மோகனவேல், சவுந்தரராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் மின்னல் வேகத்தில் ஜேப்பியாரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஜேப்பியாரின் வீடுகள், கல்வி நிலையங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை, விமான நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் சல்லடைபோட்டு ஜேப்பியாரை தேடினர். இதனிடையே சென்னை எழும்பூரில் உள்ள ராமச்சந்திரா நீரிழிவு மருத்துவமனையில் ஜேப்பியார் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். மருத்துவமனையை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஜேப்பியாரிடம் கல்லூரி உள்விளையாட்டு அரங்க கட்டிடம் இடிந்து வடமாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பலியான வழக்கில் உங்களை கைது செய்கிறோம் என்று போலீசார் கூறி அவரை திடீரென கைது செய்தனர்.
மேலும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட் அப்துல்மாலிக் ஜேப்பியார் சிகிச்சை பெற்று வந்த சென்னை மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு விசாரணை நடத்திய அவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜேப்பியாரை வருகிற 22-ந்தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஜேப்பியார் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அழைத்து செல்லாமல் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட பிரபல கல்வியாளர் ஜேப்பியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 304 ற 2 (அசம்பாவிதம் அல்லது கொலையாகாத மரணம்), 308 (அதிக காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அக்கல்லூரியின் தலைவரும், பிரபல கல்விக்குழுமங்களின் தலைவருமான ஜேப்பியார், அவரது மருமகனும், கல்லூரியின் இயக்குநருமான மரியவில்சன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது : குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்
02 May 2024அகமதாபாத் : பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு
02 May 2024பெகோட்டா : இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார். ",