எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் 3-வது நாளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸின் நிலை
காங்கிரஸ் கடந்த 2016 பொதுத்தேர்தலின் போது 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 8 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது 18 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 50 தொகுதிகளுக்கான பட்டியலை நாங்கள் வைத்துள்ளோம். நீங்கள் 18 தொகுதிகளில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்குகிறீர்களே என்று காங்கிரசார் வருத்தப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் இடையே நடைபெற்ற 2-ம் கட்டப் பேச்சில் 22 முதல் 24 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் எடுத்த முடிவில் இருந்து தி.மு.க. பின்வாங்கவில்லை. ஆனால் 35 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்டது.
இதனால் தி.மு.க. அளிக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கலாமா? அல்லது வேறு முடிவுகளை எடுக்கலாமா? என்பது குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.
நிர்வாகிகளில் பலர் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காத பட்சத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயங்கக்கூடாது. தனித்து போட்டியிட்டு நமது பலத்தை காண்பிக்கலாம். காங்கிரஸ் தொண்டர்கள் எதற்கும் தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளனர்.
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தினேஷ் குண்டுராவ், வீரப்ப மொய்லி, கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.
தற்போது தி.மு.க. 25 தொகுதிகள் வழங்க முன் வந்துள்ளதாகவும், 27 தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாகவும் தெரிகிறது. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். என வீரப்பமொய்லி தெரிவித்தார்.
ம.தி.மு.க.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. தி.மு.க. – ம.தி.மு.க. 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. இன்னும் அழைக்கவில்லை. விடுதலை சிறுத்தை கட்சியை தி.மு.க. கவுரவமாக நடத்தி உள்ளது. ஆனாலும் கமலஹாசன் தலைமையிலான 3-வது அணிக்கு ம.தி.மு.க. செல்லாது என்றும் அவர் கூறினார்.
கம்யூனிஸ்ட்
தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் தொடர்ந்து தி.மு.க.வுடனான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் தொடர்ந்து இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகளை கோரி வருகிறது.
ஏற்கெனவே 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனையடுத்து நேற்று 3-வது முறையாக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது ஏன்?
ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் தி.மு.க. குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது ஏன்? என்பது குறித்து நிர்வாகி ஒருவர் கூறியதாவது:–
கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க.வுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் தி.மு.க. 160 தொகுதிகளுக்கு கீழே நின்றதால் தான் மெஜாரிட்டியை பெற முடியாமல் போனது. தி.மு.க. ஆட்சியைப் பார்த்து மைனாரிட்டி அரசு என்று அப்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூறிவந்தது. பெரும்பான்மையை பெற தவறியதற்கு குறைந்த இடங்களில் போட்டியிட்டதே காரணம் என்பது தெரியவந்தது.
மேலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் அந்த தொகுதிகளில் எளிதாக எதிர்கட்சிகள் வெற்றி பெற்று விடுகின்றன. அவரவர் சின்னத்தில் நிற்பதால் வெற்றி வாய்ப்பும் குறைவதாக கருதியதால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 22 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 18 hours ago |
ஆனியன்ப்ரை6 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.