எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 75 வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தினமும் கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவாகும்.வழக்கமாக தேர்தல்களில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அந்த பணி முடிந்ததும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 75 மையங்களில் அடுத்த (மே) மாதம் 2-ந்தேதி எண்ணப்படுகிறது. 24 நாட்கள் வரை வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கட்சி முகவர்களும் ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொகுதி வாரியாக மின்னணு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. “ஸ்ட்ராங் ரூம்” என்று அழைக்கப்படும் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துணை ராணுவ படையினர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்து தமிழ்நாடு சிறப்பு போலீசார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணியில் உள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களின் நுழைவு வாயில்களில் மூன்றாவது வளையமாக தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்கு அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
துணைநிலை ராணுவம், சிறப்பு போலீஸ் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.75 வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தினமும் கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறைகளில் இருந்து 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை அதிகாரிகள் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகில் போலீசாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் யாரும் நெருங்காதபடி பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும்.வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் தங்கு வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது போன்ற அடையாள அட்டைகள் இல்லாத கட்சியினர் யாரையும் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாக்கு எண்ணப்பட உள்ள 75 மையங்களும் அடுத்த 24 நாட்களுக்கு பரபரப்புடன் காணப்படும்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.
வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகே அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டு எண்ணிக்கையின் போதும் இதுபோன்று கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ஓட்டுக்கு அதிகமாக இருந்த வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டதை போல கூடுதல் வாக்குகள் எண்ணப்படும் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக உதவி தேர்தல் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக 3 அல்லது 4 இடங்களில் தனித்தனியாக ஓட்டுக்களை எண்ணவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கையின் போது முகவர்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரையில் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகளில் 14 மேஜைகள் எப்போதும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது கூடுதலாக 2 மேஜைகளை அமைத்து 16 மேஜைகளுடன் ஓட்டு எண்ணும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பும், ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்பும் நோய் தொற்று பரவல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.