முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என்று மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். 

இந்நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில்,  தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள், வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன் தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. மக்களிடம் பெறப்பட்ட பி.எம்.கேர். நிதி என்ன ஆனது? என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து