எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 5 - தேர்தல் அதிகாரியையும், வீடியோ கிராபரையும் தாக்கியதாக அழகிரி மீதும், தி.மு.க.வினர் மீதும் போலீசார் வழக்குகளை பதிவு செய்திருப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து ரசாயன உரத்துறை அமைச்சர் அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர் ராவ், பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 1 ம் தேதியன்று மத்திய அமைச்சர் அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கு நடந்த சம்பவத்தை தேர்தலை கண்காணிக்கும் பறக்கும் படையினர் வீடியோ படம் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள் அந்த வீடியோ கிராபருடன் வாக்குவாதம் செய்தனர். உடனே அந்த வீடியோ கிராபர் தான் எடுத்த படத்தை மேலூர் தாசில்தாரும், உதவி தேர்தல் அதிகாரியுமான காளிமுத்துவிடம் ஒப்படைத்தார்.
அவரிடம் இருந்தும் கேமிராவை பறிக்க தி.மு.க.வினர் முயன்றனர். ஒரு கட்டத்தில் தாசில்தாரை அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவவே தமிழ்நாடு வருவாய்த் துறை அதிகாரிகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததோடு அழகிரியை கைது செய்யக் கோரி பல இடங்களில் போராட்டமும் நடத்தினார்கள். தேர்தல் பணியை புறக்கணிக்கப் போவதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் சங்கம் எச்சரித்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான தாசில்தார் காளிமுத்து புகார் செய்ததையடுத்து கீழவளவு போலீசார் கடந்த வெள்ளியன்று இரவே வழக்குப் பதிவு செய்தனர்.
தென் மண்டல தி.மு.க. அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம். மன்னன், மேலூர் தி.மு.க. யூனியன் செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் உட்பட 50 பேர் மீது தாசில்தாரும், தேர்தல் அதிகாரியுமான காளிமுத்துவை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்தனர். இ.பி.கோ. 143( 5 நபருக்கு மேலாக கூடுதல்), இ.பி.கோ. 341(வழிமறித்தல்), இ.பி.கோ. 332(அரசு ஊழியரை அடித்தல் அல்லது தாக்குதல்), இ.பி.கோ. 150(தடையை மீறி அரசு பணியை தடுத்தல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் மீது மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அழகிரி உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து மு.க. அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர்ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூட தங்கள் கடமையை ஆற்ற முடியவில்லை. எனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அழகிரியை மத்திய மந்திரி சபையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் தங்களால் வெற்றி பெற முடியாது என்று காங்கிரசும், தி.மு.க.வினரும் நினைக்கிறார்கள். அதாவது மக்களை விட இவர்கள் பணத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
இதுவே தமக்கு கடைசி வாய்ப்பு என்று கருதும் இவர்கள் ஜனநாயகத்தின் மீது போர் தொடுத்திருப்பதாகவே மேலூர் சம்பவத்தை கருத வேண்டியதிருக்கிறது. அதனால்தான் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை கூட அச்சுறுத்தி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சிறப்பான நடவடிக்கையை திசை திருப்பி அவர்களை அச்சுறுத்தும் வகையில் தி.மு.க. தலைவர்கள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள் மூலம் உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் பணியாற்றிய தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. எனவே இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு மத்திய மந்திரி பதவியில் இருந்து அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர்ராவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.