எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஏப்.- 7 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பியுமான கனிமொழி மீது வரும் 25 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ.பி.கோ. 120 பி பிரிவின் கீழ் கிரிமினல் சதித் திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வுத் துறை கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 - 10 ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி. ரியாலிட்டியின் துணை நிறுவனம் மூலமாக ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
கலைஞர் டி.விக்கு கைமாறிய ரூ 214 கோடி முதலில் குசேகான் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினி யுக் பிலிம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கைமாறியதாம். அதன் பிறகுதான் கலைஞர் டி.விக்கு கைமாறி உள்ளது. முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறுகையில்,
மத்திய புலனாய்வுத் துறையும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதாக தெரிவித்தார். இந்த தொகை கலைஞர் டி.விக்கு டி.பி. ரியாலிட்டி மூலம் கடனாக கொடுக்கப்பட்டதா? அல்லது அலைவரிசைக்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டதாக வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலத்துக்கு வந்தவுடனேயே அவர்கள் சாக்குப்போக்கு சொன்னார்கள். அதாவது, இந்த தொகை கடனாக பெறப்பட்டதாகவும், பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மிக தாமதமாகத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று வேணுகோபால் சுட்டிக் காட்டினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ராசா தற்போது திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 ம் தேதி அவர் மீதும் மற்றும் 8 பேர் மீதும் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. கிட்டத்தட்ட 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. அன்றைக்கு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. அநேகமாக இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை வரும் 25 ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்கு பிறகு இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரும், கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இருந்தாலும் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. மத்திய புலனாய்வு துறை அதை தவிர்த்து விடும் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம், கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட விவகாரங்களில் தயாளு அம்மாளுக்கு தீவிர பங்கு இல்லை என்று புலனாய்வு துறை கருதுவதால் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ. சேர்க்காது என்றே அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கனிமொழியும், சரத்குமாரும்தான் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் அந்த தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரம் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளதாம். ஆனாலும் அவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை வெகு விரைவில் தாக்கல் செய்யப்படவிருப்பதால் கருணாநிதியின் குடும்பம் தற்போது கலக்கத்தில் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரமே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். மேடைகளில் பேசும் அனைத்து தலைவர்களுமே ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை பற்றித்தான் மூலைக்கு மூலை பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.