எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்ற இதுவாகும். ஆட்டநாயகனாக மயங்க் அகர்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
540 ரன்கள் இலக்கு...
நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய 43 நிமிடங்களில் நியூஸிலாந்து அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. 540 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 56.3 ஓவர்களில் 167 ரன்களில் ஆட்டமிழந்து 372 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
4 விக்கெட்டுகள்...
ரவிச்சந்திரன் அஸ்வின் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 42 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2002-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸி. ஜாம்பவான் ஷேன் வார்ன் 24 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்குப் பின் சிறந்த பந்துவீச்சு அஸ்வினுடையதாகும்.
300-வது விக்கெட்...
அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் அஸ்வின் தனது 300-வது விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கான்பூர் டெஸ்ட்டிலே இந்திய அணி வெற்றி பெற வேண்டியது. ஆனால், கடைசியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வெற்றியை நழுவவிட்டது. அந்தத் தவறை இதில் செய்யாமல் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.
அஜாஸ் சாதனை...
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேலின் சாதனை பொறிக்கப்பட வேண்டியது. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராகவே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரின் சாதனை மிக முக்கியமான ஒன்று. கிரிக்கெட் உலகிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே, லேக்கருக்கு அடுத்தாற்போல், படேலும் இணைந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் 21 ஆண்டுகளாக இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம் வைத்திருந்த சாதனையையும் படேல் முறியடித்துவிட்டார்.
36 விக்கெட்டுகள்...
இந்த டெஸ்ட் போட்டி முழுவதுமே இரு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்களைவிட சுழற்பந்துவீச்சாளர்களின் கையே ஓங்கியிருந்தது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளிலும் சேர்த்து 36 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதில் 33 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
140 ரன்களுடன்...
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 540 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்திருந்தது. நியூஸிலாந்து அணியில் ஹென்றி நிகோலஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவிந்திரா 2 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
டக் அவுட்டில்...
ஆடுகளம் காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருந்ததால், அஸ்வின், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் பந்து நன்றாக எழும்பி, சுழன்றது. இதனால் தொடக்கத்திலேயே இருவரின் பந்துவீச்சை சமாளித்து ஆட நியூஸிலாந்து வீரர்கள் சிரமப்பட்டனர். ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் 18 ரன்னில் ரவிந்திரா, புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜெயந்த் யாதவ் வீசிய 54-வது ஓவரின் 2-வது பந்தில் ஜேமிஸன் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் சவுதி கால்காப்பில் வாங்கி டக் அவுட்டில் வெளியேறினர்.
அஸ்வின் - ஜெயந்த் ...
அடுத்துவந்த சோமர்வில்லே ஒரு ரன்னில் யாதவ் பந்துவீச்சிலும், நிகோலஸ் 44 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்கள். 162 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 5 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. 2-வது இன்னிங்ஸில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணி சாதனை
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. மேலும், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
அதேபோல் இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் ஆதிக்கும் செலுத்தி வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக பொறுப்பேற்று 66 போட்டிகளில் அணியை வழி நடத்தியுள்ளார். இதில் 39 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
கோலி புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்றதில்லை. மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று 50-வது வெற்றியில் பங்களித்துள்ளார் விராட் கோலி.
இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளைக் கண்ட முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்டுகள்: ஆட்டங்கள் - 97, வெற்றிகள் - 50, ஒருநாள்: ஆட்டங்கள் - 254, வெற்றிகள் - 153, டி20: ஆட்டங்கள் - 95, வெற்றிகள் - 59.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.