எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்...
மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வலம் வருவதற்கான ஏற்பாடுகள், கோவிலில் மின் அலங்காரம் என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவ விழா...
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.
சித்திரை பெருவிழா...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய திருவிழா நிறைவு இன்று முடிவு செய்து கொண்டு தொடங்க பெறுவதாகும். அதன்படி சித்திரை தீர்த்தத்தை கணக்கில் கொண்டு அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்குகிறது.
கொடியேற்றத்துடன்...
12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இன்றைய தினம் முதல் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்...
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டணமில்லாமல்...
திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் (WWW.maduraimeenakshi.Org) நேற்று முதல் 7-ம் தேதி வரை பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் டிக்கெட் வாங்க வேண்டும். டிக்கெட் பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண விழாவில் இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
தேரோட்டம்...
திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். திருக்கல்யாணத்திற்கு மறுநாள் வருகிற 15-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
திருக்கல்யாணத்திற்கு முன்பதிவு
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண உற்சவத்தை காண வரும் பக்தர்கள் வரும் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணச் சீட்டு 2500 பக்தர்களுக்கும், 200 ரூபாய் கட்டணச் சீட்டு 3200 பக்தர்களுக்கு வழங்க உள்ளது. பக்தர்கள் WWW.maduraimeenakshi.Org என்ற இணையதளம் மூலமாகவும், மீனாட்சியம்மன் கோவில் மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கு விடுதி அலுவலகத்திலும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு வரும் 13ஆம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.