எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31 - அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஆனால் குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நான்காவது முறையாக முதல்வராக நரேந்திர மோடி, கடந்த 26-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று அவரை நேரில் வாழ்த்தினார்.
அதன்பின் 27-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சிக்குழுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்கவும் முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல வேண்டி இருந்தது.
அதனால் 28- ம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாமல் இருந்ததால் இந்த கூட்டம் 31- ம் தேதி நடக்கும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 15-ம் தேதியன்று அறிவித்து இருந்தார். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவித்து இருந்தார். அதையொட்டி அ.தி.மு.கவின் செயற்குழுவும், பொதுக்குழுவும் இன்று கூடுகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மற்றும் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 2500-க்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இரண்டாவது முறையாக இன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் செயற்குழு பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற தொகுதி ரீதியான அ.தி.மு.க கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், இது வரை நடந்துள்ள நாடாளுமன்ற தொகுதிக் கூட்டங்கள் குறித்தும் தமிழக அரசு செயல்படுத்தப்பட்டு வரும் 2013 தொலை நோக்குத் திட்டத்தின்படி தமிழக அரசு இது வரை செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும், அ.தி.மு.க. கழக செயல்பாடுகள் மற்றும் துணை அமைப்புகள் குறித்த செயல்பாடுகள் பற்றியும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க இனி செயல்படுத்தப்பட உள்ள கட்சி ரீதியான செயல்பாடுகள் குறித்தும் இந்த பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் கடந்த 27-ம் தேதியன்று நடந்த தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை 10 நிமிடம் தான் பேசவேண்டும் என்று கூறி அவர் பேசும் போது தொடர்ந்து மணியடித்து அவரை பேசவிடாமல் செய்து விட்டனர். இதையடுத்து தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். மிக முக்கியமான 12 வது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கையை இறுதி செய்யும் கூட்டத்தில் ஒரு மாநிலத்தின் நிலையை 10 நிமிடத்தில் எப்படி எடுத்து கூற முடியும் என்று கேள்வி எழுப்பிய முதல்வர் ஜெயலலிதா, இத்தகைய நிலையில் ஒரு மாநில முதல்வரை ஏன் டில்லி வருமாறு அழைக்க வேண்டும்? ஏன் பேச அழைக்க வேண்டும்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அதோடு ஒரு மாநில முதல்வரை பேச விடாமல் செய்தது தமிழகத்தையே அவமானப் படுத்தியதற்கு ஒப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். டில்லி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பேச விடாமல் செய்ததற்கு அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற குஜராத் முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். இத்தகைய சூழலில் இந்த செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. இதையொட்டி முதல்வரை பேசவிடாமல் செய்ததிற்கு மத்திய அரசின் மீது கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
மேலும் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை செவி சாய்க்காமல் இருப்பது, பல்வேறு நலத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் இருப்பது, கூடுதல் மின்சாரம் வழங்காமல் இருப்பது, மாநில அரசுகளின் கருத்துகளையும் மதிக்காமல் தேசிய பயங்காரவாதத் தடுப்பு மையம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிப்பதைக் கண்டித்தும், அதே நேரத்தில் தமிழகத்தில் மத்திய அரசின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும். மின்சாரம் முழுமையும் தமிழகத்திற்கே அளிப்பது, காவிரி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்களின் கூட்டங்கள் குறித்து ஆய்வுகளை செய்வதுடன் , வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய அரசியலில் முதல்வர் ஜெயலலிதாவை முக்கியத்துவம் பெற செய்வதற்கான செயல்திட்டம் உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையில் இன்று கூடும் இந்த செயற்குழு, பொதுக்குழு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .