எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1982 முதல் 1989 வரையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் அருண் லால். பின்னர், கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யும் பணியை கவனித்து வந்தார். இப்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரது பயிற்சியின் கீழ் அபாரமான ஆட்டத்தை டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி உள்ளது மேற்கு வங்க அணி. இந்நிலையில், அவர் இப்போது தன் நீண்ட கால நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இவர்களின் திருமணத்தையொட்டிய நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலானது. அருண் லால், தனது முதல் மனைவி ரீனாவை பிரிந்துவிட்டார். முதல் மனைவியின் அனுமதியுடனே தற்போது 38 வயது புல்புல்லை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என சொல்லப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள அவரது முதல் மனைவி ரீனாவை இரண்டாவது மனைவியுடன் அருண் லால் கவனித்துக் கொள்வார் எனவும் நெருங்கிய உறவுகள் தெரிவித்துள்ளனர்.
_____________
சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளருக்கு தடை
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் டோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் தேர்வுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு பத்திரிகையாளர் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக விருத்திமான் சாஹா பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார்.
இது குறித்து அந்த பத்திரிகையாளர் உடன் நடந்த உரையாடல் குறுஞ்செய்தியை விருத்திமான் சாஹா வெளியிட்டார். ஆனால் அந்த பத்திரிகையாளர் பெயரை அப்போது அவர் வெளியிடவில்லை. பின்னர் பிசிசிஐ விருத்திமான் சாஹா-விடம் முழுமையான விசாரணை நடத்தியது. பின்னர் போரியா மஜும்தார் என்ற அந்த பத்திரிகையாளர் தானாக முன்வந்து சாஹா உடன் நடந்த உரையாடல் குறித்து விளக்கம் அளித்து இருந்தார். பிசிசிஐ அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது .இந்நிலையில் பத்திரிகையாளர் போரியா மஜும்தார்க்கு 2 ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது
______________
இளம் வீரருக்கு தீபக் சாஹர் வழங்கிய அறிவுரை..!!
சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சு சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக பவர்பிளே-வில் சென்னை அணி தொடக்க போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியது. ஒரு பக்கம் ரன்கள் போனாலும் சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி பந்துகளை நன்றாக ஸ்விங் செய்கிறார்.இதனால் கடந்த சில போட்டிகளில் அவர் அதிக விக்கெட் வீழ்த்த தொடங்கியுள்ளார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அவர் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த நிலையில் தற்போது முகேஷ் சவுத்ரி சென்னை அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான தீபக் சாஹர் தனக்கு அறிவுரை வழங்கியது குறித்து பேசியுள்ளார். தீபக் சாஹரின் அறிவுரை குறித்து முகேஷ் சவுத்ரி கூறுகையில், " தீபக் அற்புதமான பந்து வீச்சாளர். நான் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறேன், அவர் எனக்கு பல விஷயங்களை கற்று தருகிறார். ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை எடுத்த போது சாஹர் என்னை பாராட்டினார். குறிப்பாக டோனி கூறும் ஆலோசனையை கேள் என கூறினார். தீபக் சாஹரின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தன” என முகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.
____________
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் முன்னேற்றம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் உடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 , 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தரவரசையில் 78-வாத்து இடத்தில் இருக்கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே உடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.
அதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தய சுற்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி வீராங்கனையும் அமெரிக்க ஓபன் சாம்பியனுமான எம்மா ரடுகானு 2-6 , 6-2, 4-6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
_______________
மோசமான வீரராகி விடமாட்டீர்கள்: கோலி குறித்து டிவில்லியர்ஸ் கருத்து
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் கடந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்தார். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் "ஃபார்ம்" பற்றி அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரரும் தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவானுமாகிய ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், " ஒரு பேட்ஸ்மேன் ஆக தொடர்ந்து நீங்கள் மோசமான "ஃபார்மில்" இருந்தால் அதிலிருந்து மீள்வது கடினம். மோசமான ஃபார்மிற்கு ஒரு சதவீதத்தை வைக்க முடியாது.அதே நேரத்தில் நீங்கள் ஒரே இரவில் மோசமான வீரராக ஆகிவிடமாட்டீர்கள். அதை விராட் கோலி அறிவார் அது எனக்கும் நன்கு தெரியும். இவ்வாறு தான் நீங்கள் யோசிக்க வேண்டும். நீங்கள் விளையாடும் போதெல்லாம் உங்களுக்கு தெளிவான மனமும் புத்துணர்ச்சியும் தேவை. இதை தொடர்ந்தால் மோசமான "ஃபார்மில்" இருந்து மீள நிச்சயம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கலாம் " என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.