எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி. ஏப். 18 - தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ் தென்காசியில் பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.
தென்காசியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்திய தலைமை தேர்தல் ஆணையர், மற்றும்
தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் நன்றி தெரிவித்து கொள்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்தவர்களுக்கு தேர்தல் கமிஷன் சரியான பாடம் புகட்டியுள்ளது. தேர்தல் கமிஷன் மிகவும் நடுநிலையோடு செயல்பட்டுள்ளது. பணம் இல்லாமல் இனி தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலையை மாற்றியுள்ளது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால் எங்களை போன்ற கட்சிகள் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட முடிந்தது. எனவே இந்த தேர்தலில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட தேர்தல் ஆணையர் பிரவீன்குமார், மற்றும் ராஜேந்திரன், அமுதா மற்றுமுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் மிகவும் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றினார்கள். அஇஅதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் முடிந்த பிறகும் கூட திமுகவினர்கள் அதிமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையும் தேர்தல் கமிஷன் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளார்கள். அதற்கு காரணம் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் தான். தேர்தல் கமிஷன் வீடுவீடாக சென்று அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கியது பாராட்டுக்குரியது. கடந்த காலங்களில் முறையாக பூத் சிலிப் கிடைக்காததால் மக்கள் வாக்களிக்க வரவில்லை. காரணம் வாக்கு சாவடிக்கு சென்று தங்கள் வாக்கு எந்த பகுதியில் உள்ளது. என்று தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. இதனால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளார்கள். திமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபம், ஆத்திரம் இவைகள் தான் அதிக அளவில் வாக்களிக்க காரணம் ஆகும். தமிழகத்தில் மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இனிமேல் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பேசினார், மறுநாள் 4 மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக
கொலை செய்து உடல்களை கடலில் வீசியுள்ளார்கள். தமிழக மீனவர்களை தொடர்ந்து கொலை
செய்து வரும் சிங்கள இரானுவத்தினர் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உயிர் இழந்த மீனவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி பலமுறை தமுமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றுவரை எந்த பலனும் இல்லை.குறிப்பாக சிடி ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட சேப்பாக்கம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய 3
தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின் போது நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் நயினார் முஹம்மது, முன்னாள் மாவட்ட செயலாளர் உஸ்மான், மாநில பேச்சாளர் மில்லத் இஸ்மாயில், மாவட்ட துணைச்செயலாளர் தென்காசி முகம்மது அலி, மாவட்ட துணைத்தலைவர் முகம்மது சரிபு, தொண்டரணி பிரமுகர் பண்பொழி செய்யது அலி, தொழிற்சங்க செயலாளர் முகம்மது அலி, விவசாய அணி சுலைமான், மற்றும் பீர்ஜாத், மகுதணன், மசூது அலி, பிரேம் அலி, சலீம், வாப்பாசேட், அசரப், மைதீன்பாபு, ஷேக் அப்துல்காதர், ராஜா, நல்லவர் சேட், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
காங்கிரஸ் சாதிக்க முடியாததை பாரதிய ஜனதா சாதித்துள்ளது : மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
30 Apr 2024மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் 60 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை பா.ஜனதா 10 ஆண்டுகளில்