எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் : இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரம்தான் தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி என்றும், மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் தேடித்தேடி நிறைவேற்றி வரக்கூடிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி என்றும் திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது, பதினான்காம் நூற்றாண்டில் திரு-வன-புரம் என்ற பெயரில் இருந்த ஊர்தான், திருப்பத்தூர் எனப் பெயர் மாற்றம் அடைந்து இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைத் தொடர்களால் சூழப்பட்ட, இயற்கை எழில் மிகுந்த மாவட்டம் இந்த மாவட்டம்.
இந்த திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடிய 4 சட்டமன்ற தொகுதிகளை சார்ந்திருக்கக் கூடிய 16,820 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் 103 கோடியே 42 லட்சத்து 92 ஆயிரத்து 445 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி ஒவ்வொரு தேவைகளையும் தேடித்தேடி நிறைவேற்றி வரக்கூடிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி.
தி.மு.க. ஆட்சியில் தான், பல்வேறு திட்டங்களுக்கும் சேர்த்து ஒரே விழாவாக நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு திட்டத்திற்கு ஒரு விழா எடுப்பதாக இருந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 365 நாளும், தனித்தனியாக நாம் விழா எடுத்தாக வேண்டும். அந்தளவுக்கு ஏராளமான திட்டங்கள், அந்தத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்தலமாக விளங்குவதால், இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில், உயர்கல்வியில் பின்தங்கியுள்ள நாட்றாம்பள்ளி வட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்கான கல்லூரி வசதிகள் இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று தொடங்கப்படும்.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவசிய, அவசரமான திட்டங்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்து, அதனை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். அனைத்து மக்களின் வளர்ச்சி இது தான் திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது. எப்போதுமே இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு தனிமனிதருடைய தேவையையும் நிறைவேற்றியாக வேண்டும்.அந்த வகையில்தான் அனைத்து மக்களிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றையும் நான் நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணத்தில் இருந்து இம்மியளவும் மாறாமல் இந்த ஆட்சி தொடர்ந்து பீடுநடை போடும். அப்படி நடந்தால், ஐந்தாண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாடு நிச்சயம் பெறும். ஒவ்வொரு திட்டத்தையும், தமிழக மக்களாகிய உங்கள் நலன் கருதியே இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
உங்களின் வாழ்வு உயர, தமிழ்நாடும் உயரும். அத்தகைய பொற்காலத்தை உருவாக்குவதற்காகதான் எனது உடல்சோர்வைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், நான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன். எனது சக்தியை மீறி உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தகைய ஆட்சிக் காலமானது தமிழ்நாட்டின் பொற்காலம். இந்தப் பொற்கால ஆட்சியைத் தொடர்வோம். இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக இதனை மலரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.