எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 9 - காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வெற்றி கண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சையில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது. அந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ``பொன்னியின் செல்வி'' சிலை நினைவுப் பரிசாக வழங்கப்படுகிறது. மத்திய அரசிதழில் காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடச் செய்து, தமிழகத்துக்கான காவேரி நீnullரை உச்சநீnullதிமன்றம் மூலம் பெற்று தந்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை 27.2.2013 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காவேரி பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் .எஸ். ரெங்கநாதன் தலைமையில் காவேரி டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இதற்கான விழாவை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 7-ந் தேதி தஞ்சையில் இந்த விழாவை நடத்த அனுமதி அளித்தார். இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வருகிற 7-ந் தேதி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சைக்கு வருவதாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தஞ்சை வருகை 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. ``விழா ஏற்பாடுகளை கவனிக்க போதுமான கால அவகாசம் இல்லாததால் 2 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். அதை அவர் பெரும் மனத்துடன் ஒப்புக் கொண்டு வருகிற 9-ந் தேதி சனிக்கிழமை தஞ்சையில் பாராட்டு விழா நடத்த அனுமதி அளித்துள்ளார். இந்தப் பாராட்டு விழா வருகிற 9-ந் தேதி மதியம் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது'' என்று தமிழ்நாடு காவேரி பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரெங்கநாதன் கூறியிருந்தார்.
அதன்படி இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் இன்று தஞ்சை வருகிறார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு காவிரி nullநீர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்குகிறார். தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப்பேசுகிறார். விழாவில் முதல்அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேல், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம் சத்தியநாராயணன், தமிழ்நாடு உழவர் பேரியக்க தலைவர் பாண்டுரங்கன், தமிழ்நாடு காவிரி நீnullர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் துணைத் தலைவர் ராஜாராம், திருவையாறு நவ்ரோஜித் சோழகர், அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் துரை. கோவிந்தராஜன், செயலாளர் கு.தங்கமுத்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். முடிவில் தமிழ்நாடு காவிரி nullநீர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் இணை செயலாளர் காந்திபித்தன் நன்றி கூறுகிறார்.
விழாவில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வி வெண்கல சிலை நினைவு பரிசாக வழங்கப்படுகிறது. தஞ்சையில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்றே முதல்அமைச்சர் ஜெயலலிதா கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார். இந்த விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து ஆய்வு செய்தனர்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் பந்தல் அமைக்கும்பணிகளையும், வரவேற்பு ஏற்பாடுகளையும் அங்கே இருந்து பார்வையிட்டு வருகிறார்கள். அவர்களுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், ரெங்கசாமி எம்.எல்.ஏ., நகரசபை தலைவி சாவித்திரிகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்து ஆய்வு செய்தனர். முதல்அமைச்சர் தஞ்சை வருகையையொட்டி தஞ்சை நகரமே விழாக்கோலம் nullண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. கொடிகளாகவே காணப்படுகின்றன. மேலும் முதல்அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளிலும், வல்லம் சாலையிலும், புதிய பஸ் நிலையம் பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.