முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாபஸ் முடிவில் திமுக உறுதியாக இருக்க வலியுறுத்தல்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை,  மார்ச்  21 - மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவது என்ற முடிவில் திமுக உறுதியாக  இருக்க வேண்டும்  என்று  இலங்கைத்  தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர்  பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை  திமுகவின் குறைந்த பட்ச  கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு  பரிசீலிக்கவில்லை என்றும், அதனால் கூட்டணியில் இருந்தும்,  மத்திய  அமைச்சரவையில்  இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி  அறிவித்துள்ளார்.  காலம் கடந்த முடிவு  என்றாலும்  இது வரவேற்கத்தக்கது.  கடந்த காலங்களில்  மத்திய அரசுக்கு  எச்சரிக்கை விடுத்து விட்டு  பிறகு  பின் வாங்கியதுபோல இல்லாமல்  இந்த நிலைப்பாட்டில்  அவர் உறுதியாக  இருக்க வேண்டும். இதனைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகம் முழுவதும் மாணவர்கள், வழக்குரைஞர்கள், திரைத்துறையினர். நடத்தி வரும் போராட்டத்தின் விளைவாகவே இத்தகைய  முடிவு எடுக்க வேண்டிய  நிலைக்கு  திமுக தள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள், வழக்குரைஞர்கள், திரைத்துறையினர்  நடத்தி வரும் போராட்டத்தின் விளைவாகவே இத்தகைய முடிவு எடுக்க வேண்டிய  நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து  போராடுவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்படும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்