எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.28 - இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு அளித்தும் அவர் பேசாமல் வெளிநடப்பு செய்ததன் பேரில் நழுவினர். அவரை தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், இந்த பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தார்கள்.
இதன் மீது கட்சிக்கு ஒருவர் வீதம் பேச சபாநாயகர் அழைத்தார். தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்திருந்தார்கள்.
தி.மு.க. தரப்பில் கோவி. செழியன் பேசினார். அவர் பேசும்போது, தான் கொடுத்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசாமல் வேறு பிரச்சினையை கிளப்பி பேசினார்.
இதற்கு அமைச்சர்கள் மற்றும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் கோவி. செழியன் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட பிரச்சினை மீது மட்டும் பேசுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். இருந்தபோதிலும் கோவி. செழியன் தொடர்ந்து வேறு பிரச்சினையை கிளப்பி அதன்மீது பேசினார். ஆளுங்கட்சி தலைப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் பேசிய பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து கோவி. செழியனை பேச சபாநாயகர் அழைத்தார். கோவி. செழியனும் பேசினார் மீண்டும் பழைய பிரச்சினையை பேசினார்.
அண்ணா தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஒரே கூச்சல்-குழப்பம் நிலவியது. இந்த நிலையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து உறுப்பினர் கோவி. செழியன் திரும்ப திரும்ப அதையே பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசிய அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். தேவையில்லாதவற்றை பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து கோவி. செழியன் பேசிய அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணனை பேச சபாநாயகர் அழைத்தார். அவரும் எழுந்து பேச முற்பட்டார். அவரை பேசவிடாமல் தி.மு.க.வினர் எழுந்து நின்று கூச்சல் எழுப்பி கோவி. செழியனுக்கு பேச வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
சபாநாயகர் அவரை பேச அனுமதித்தார். மீண்டும் அவர் பழைய கதைக்கே சென்றார். உடனே அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து முதலமைச்சர் அம்மா கருணையுடன் தந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மீண்டும் பழைய கதைக்கே செல்கிறார். எனவே வேறு உறுப்பினரை பேச சபாநாயகர் அழைக்கலாம் என்று கூறினார்.
தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் எழுந்து நின்று பேச வாய்ப்பு கேட்டு கொண்டிருந்தார்கள். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறிய சபாநாயகர் அனைவரும் இது போன்று எழுந்து நின்று பேசுவது முறையல்ல. உட்காருங்கள் என்று எச்சரித்தார்.
இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆவேசமாக எழுந்து சபாநாயகரை பார்த்து கையை நீட்டி நீட்டி பேசிக் கொண்டிருந்தார். அவரை சபாநாயகர் எச்சரித்தார்.
தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் எழுப்பி கொண்டிருந்தார்கள்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்கள் இருக்கையை விட்டு முன் வரிசைக்கு சபாநாயகர் அருகே வந்தார்கள். அங்கேயும் அன்பழகன் சபாநாயகரை பார்த்து கையை நீட்டி நீட்டி ஆவேசமாக பேசினார். அனைவரும் அவரவர் இடத்தில் போய் அமருங்கள் என்று சபாநாயகர் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை உறுப்பினர் மு.க. ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். எனவே இதன் மீது அவர் பேசலாம் என்று சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து கோவி. செழியனை பேச அனுமதிக்குமாறு கேட்டார்.
உடனே இதற்கு சபாநாயகர் கோவி. செழியனுக்கு கொடுத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. எனவே நீங்கள் பேசுங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து கோவி. செழியன் தான் பேச வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி கொண்டிருந்தார். சபாநாயகர், நீங்கள் பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் ஸ்டாலின் பேசுவதற்கு தயாராக இல்லை.
இந்த நிலையில் ஸ்டாலின் எழுந்து உறுப்பினர் கோவி. செழியன் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கினீர்கள். இந்த நிலையில் தொடர்ந்து என்னை பேச அழைத்தீர்கள். நன்றி. ஒரு உறுப்பினருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு என்னை பேச அழைப்பது சரியல்ல. நான் பேசுவது மரபு அல்ல என கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்று விட்டார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.