எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.27 - ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை தருவதற்கு வசதியாக, முதலமைச்சர் கருணாநிதி தானே முன்வந்து பதவி விலக வேண்டும், அல்லது இந்திய அரசு தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக அதன் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.
ஒவ்வொரு முறையும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இடைநீnullக்கம் செய்வதும், அதற்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆயின என்பதும் இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதாகி இறந்துள்ளார்களே தவிர, தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றதாக வரலாறு இல்லை.
சான்றாக 1991-1996 வரை தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராமின் படுக்கையிலிருந்து பல கோடி ரூபாய்கள் பணமாகவே கைப்பற்றப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு, அந்த தண்டனையையும் எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். இன்னும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு தற்போது 84 வயதாகிறது. அதைப் போல் ஆகிவிடக் கூடாது. அந்த அளவுக்கு ஊழல் வழக்குகளில் காலதாமதம் நீnullடிப்பதுதான் வரலாறு.
ஊழல் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஊழல் செய்து அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் உடனடியாக இந்திய அரசு முடக்கி வைக்க வேண்டும். தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றால் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வருமான வரி சோதனை என்றால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கு இத்தகைய உடனடி தண்டனையை வழங்குகிற மத்திய, மாநில அரசுகள் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளிலும், நிலங்களிலும், கட்டிடங்களிலும், கம்பெனி பங்குகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் போட்டு வைத்திருப்பதை உடனடியாக ஏன் முடக்கக் கூடாது என்பதே எனது கேள்வி.
அவற்றை அப்படியே விட்டு வைப்பதால் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு பெரிய பெரிய வக்கீல்களை நியமித்து வழக்குகளில் காலதாமதம் செய்கின்றனர் அல்லது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்குகளை முடக்கிப் போடுகின்றனர். அந்த ஊழல் பணத்தை வைத்து தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றனர். ஜனநாயகமே ஊழல்நாயகமாக ஆகிவிடுவதை இந்திய அரசு ஏன் தடுக்கவில்லை.
ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை தந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய மந்திரியாக இருந்த ராஜா மீது மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. மத்திய மந்திரி பதவியில் அவர் தொடர்ந்து இருந்தால் அவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி புலன் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்த முடியும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். ஆகவே வேறு வழியின்றி மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜா விலக நேர்ந்தது. இன்று முக்கிய குற்றவாளியாக டெல்லியில் திகார் சிறையில் இருக்கிறார்.
இந்த ஊழல் பணத்தில் ரூபாய் 214 கோடி கலைஞர் டிவி ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மத்திய புலனாய்வுத் துறை நேற்றைய தினம் உச்சnullநீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., இதில் கூட்டுச் சதியாளர் என்று கூறப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் 2வது மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவியில் 60 சதவிகிதப் பங்கு வகித்தும் கூட அவரை மத்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டில் சேர்க்கவில்லை. அவரை இயங்காத பங்குதாரர் என்று கூறி மத்திய புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை. 20 சதவிகிதப் பங்கினை பெற்றுள்ள கனிமொழி எம்.பி., சரத்குமார் ரெட்டி ஆகியோர் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளபோது, அதைப் போல மும்மடங்கான 60 சதவிகித பெரும்பான்மை பங்கு வகிக்கும் தயாளு அம்மையாரையும் முறைப்படி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா? சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே. இங்கே சட்டம் இருட்டறையில் போய் ஒளிந்து கொண்டதா?
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் எந்த அதிகார பொறுப்பிலும் இல்லை. அப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு அதனுடைய கடந்த கால இலாபக் கணக்கை பார்க்காமல் ரூபாய் 214 கோடி கொடுக்க முன் வந்தார்கள் என்பது கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிற கதைதான்.
ஆகவே இந்தப் பணம் மத்திய புலனாய்வுத் துறை சொல்வதைப் போல ஊழல் பணம் என்பதும், இந்தப் பணத்தை முதலமைச்சர் கருணாநிதி நேரில் கொடுத்து கலைஞர் டி.வி.யில் அவரை பங்குதாரராக முதலமைச்சர் என்ற காரணத்தால் போட முடியாததாலேயே கருணாநிதியின் பினாமியான தயாளு அம்மையாருக்கு தரப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். ஆகவே இந்தப் பண பரிமாற்றம் கருணாநிதிக்கு நேராக தரப்பட்டுள்ளது என்று கருதுவதே பொருத்தமானது.
எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் ராஜா நீnullடித்தால் இந்த இமாலய ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுமோ, அதே போன்று கலைஞர் டிவி மீது இந்த ரூபாய் 214 கோடி தரப்பட்டுள்ள வழக்கு பாய்வதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக nullநீடிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், ஊழல் விசாரணை தொடர்வதற்கும், ஊழல் பேர்வழிகளை கண்டறிந்து உடனடியாக தண்டனை தருவதற்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி இந்த இமாலய ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீnullதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சராக உள்ள கருணாநிதி, முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது இந்திய அரசு மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் கருத்தில் கொண்டு nullநீதியை நிலைநாட்ட கருணாநிதி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர் அன்று. பேராசையே பெரும் துன்பம் என்று நிரூபிக்கப்படுகிறது இன்று.இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.