எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயு வெளியேறியது தொடர்பாக கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானத்துக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 55-ன் கீழ் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், க.பாலகிருஷ்ணன், கே.பாலபாரதி, ம.கலை அரசு, அ.கணேஷ்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகியோர்களால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில் அறிக்கை வருமாறு:-
இத்தொழிற்சாலைக்கு எதிராக நேஷனல் டிரஸ்ட் ஃபார் க்ளீன் என்விரான்மெண்ட் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இத்தொழிற்சாலையின் கடந்த கால நிகழ்வுகளையும், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் மண் மற்றும் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் இருப்பது அறியப்பட்டதை கருத்தில் கொண்டும் மற்றும் இதர ஆவணங்களை பரிசீலித்தும் கடந்த 28.9.2010 அன்று மேற்படி தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடையுத்தரவு பெற்று தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டுஅதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேற்படிஅறிக்கையில் குறிப்பிடப்பட்ட மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இத்தொழிற்சாலையை அறிவுறுத்தியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து கடந்த செப்டம்பர் 2012-ல் தொழிற்சாலையை ஆய்வு செய்து, அதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இதுவரை தொழிற்சாலையின் மீது வாரியம் மேற்கொண்ட கண்காணிப்பு பற்றிய ஆவணங்களை கடந்த 6.12.2012 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 2.4.2013 அன்று வழங்கிய இறுதி தீர்ப்பில் 2010-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து, ஆலையை செயல்பட அனுமதி வழங்கியதுடன் இவ்வாலை சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.100 கோடி அபராதமும் விதித்துள்ளது.
இதற்கிடையில் 23.3.2013 அன்று காலை 7 மணியளவில் தூத்துக்குடி கீழசண்முகாபுரம், புதுகாலனி பொதுமக்களிடமிருந்து கண் எரிச்சல் மற்றும் தொண்டை அடைப்பு முதலிய பாதிப்புகள் இருப்பதாக தொலைபேசி மூலம் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் புகார் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிப்காட் வளாகத்தினுள் செயல்படும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தொழிற்சாலையை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வாரிய உறுப்பினர் செயலரும் 24.3.2013 அன்று தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கீழ்கண்ட விவரங்கள் அறியப்பட்டது.
தாமிர உருக்காலையின் குளிரூட்டும் குழாய்களில் ஏற்பட்ட கசிவினை சரி செய்ய 21.3.2013 அன்று உருக்காலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 23.3.2013 அன்று அதிகாலை துவக்கப்பட்டது. இத்தருணத்தில் (23.3.2013 அதிகாலை 2.15 ஏ.எம்.- 2.45 ஏ.எம்.) சென்னை வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றின் தொடர் கண்காணிப்பு மையத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கந்தக அமில பிரிவின் புகைப் போக்கியிலிருந்து வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடின் அளவு 2103.23 மி.கி.- க.மீ. இருந்து 2939.55 மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட தர அளவு 1250 மி.கி.- க.மீ. விட அதிகமாக இருப்பது அறியப்பட்டது.
மீண்டும் 23.3.2013 அன்று காலை 9.15 ஏ.எம்.- 11.15 ஏ.எம். மணியளவில் இதன் அளவு 1767.65 மி.கி.- க.மீ. இருந்து 2941.12. மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது நிர்ணயிக்கப்பட்ட தர அளவை விட கந்தக டை ஆக்ஸைடு அளவு அதிகமாக பதிவாகியிருந்ததை அறிந்து இதனை உடனடியாக சரி செய்யும்படி வாரிய தொடர் காற்று தர கண்காணிப்பு மையத்திலிருந்து மின் அஞ்சல் மூலம் தொழிற்சாலைக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சாலையிலிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை.
23.3.2013 அன்று காலை மீளவிட்டான், அண்ணாநகர், பிரையன்நகர், ஜார்ஜ் ரோடு, திவிபுரம் ஆகிய பகுதி பொதுமக்கள் கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக தூத்துக்குடிமாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் இப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை கேட்டுக்கொண்டார்.
சஐஞநஏ (சஹசிடுச்டூஹங் ஐடூஙூசிடுசிசீசிடீ ச்க் ஞஷஷசீஙீஹசிடுச்டூஹங் நஹக்டீசிநீ ஹடூக்ஷ ஏடீஹங்சிகீ) பரிந்துரைகளின் படி சுற்றுப்புறக் காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3) -க்கு மிகைப்படும்போது மனிதனுக்கு கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனினும் மேற்குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் காற்றுத் தொடர் கண்காணிப்பு கருவி இல்லாமையால் சுற்றுப்புற காற்றில் கந்தக டை ஆக்ஸைடின் அளவை துல்லியமாக அறிய இயலவில்லை. மேலும் 23.3.2013 அன்று காலை அப்பகுதிகளில் மேற்படி புகாரின்படி சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு குறைந்தபட்சம் 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3) அளவிற்கு அதிகமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
23.3.2013 அன்று நடந்த நிகழ்வுகளை அறிவுறுத்தி மூன்று நாட்களுக்குள் அதற்கான விளக்கம் அளிக்குமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் முகாந்திரக் கடிதம் அனுப்பியது. இதற்கு தொழிற்சாலை 27.3.2013 நாளிட்ட கடிதத்தில் விளக்கம் அளித்தது. அதில் 23.3.2013 அன்று கந்தக அமில நிலையத்தின் புகைப் போக்கியின் வழியாக வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடு வாயுவின் அளவை தொடர்ந்து அளவிடும் கருவியினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அத்தருணத்தில் மேற்படி கருவியின் அளவீடுகள் பராமரிப்பு நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. தொழிற்சாலை தமது தாமிர உருக்காலையை பராமரிப்பதற்காக தற்காலிகமாக நிறுத்துவதையும் மீண்டும் அதனை இயக்குவதையும் வாரியத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். ஆனால் தொழிற்சாலை அவ்வாறு தெரிவிக்கவில்லை. வாரிய தொடர் கண்காணிப்பு மையத்தில் பதிவான அளவினை பரிசீலனை செய்யும்போது 23.3.2013 அன்று காலை தொழிற்சாலையின் கந்தக அமிலப் பிரிவிலிருந்து கந்தக டை ஆக்ஸைடு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்றில் கலக்கப்பட்டது உறுதி செய்யப்படுகிறது. இதுவே, பொதுமக்களின் புகாருக்கு காரணமாக இருந்திருக்கிறது.
தொழிற்சாலையின் விளக்கத்தை நிராகரித்து 29.3.2013 அன்று வாரியம் பிரிவு 31 ஏ காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981-ன் (ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்.,) தாமிர உருக்காலை பிரிவினை மூடுவதற்கும் மற்றும் மின் இணைப்பை துண்டிப்பதற்கும் உத்தரவிட்டது. அதன்படி 30.3.2013 அன்று தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேற்படி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 29.3.2013 நாளிட்ட மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பினை துண்டிப்பதற்கான உத்தரவு ஆகியவற்றை எதிர்த்து ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு 12.4.2013 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் விசாரணைக்குப் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது இடைக்கால உத்தரவில், இந்நேர்வு தொடர்பாக இரண்டு பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பதற்கும், இக்குழுவில் ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும் எனவும் இவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து ஒருவரும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. மேலும், இந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் பெயர்கள் 18.4.2013 அன்று வெளியிடப்படும் எனவும் இக்குழு ஆலையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆலையை இயக்கி காட்ட வேண்டும் எனவும் இந்த ஆய்விற்குப் பின் நிபுணர் குழுவின் அறிக்கையை 29.4.2013 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.