எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 30 - போர் குற்றவாளிகளை விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் இந்த போராட்டத்தில் அணி திரள வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனித உரிமை மீறல்கள், போர்க்காலத்தின்போது சர்வதேச சட்ட நெறிகளை மீறி இழைக்கப்பட்ட கொலைகள், குடிமக்கள் மீதே முப்படையை ஏவி குண்டு வீசிக் கொன்றது, குடியிருப்புக்கள், மருத்துவ மனைகள், கல்வி நிலையங்கள், தொழுகை நிலையங்களின் மீதும் ராணுவத் தாக்குதல் நடத்தி அழித்தது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் பற்றி வந்த புகார்களை விசாரித்து ஆதாரம், தடயங்களைச் சேகரித்த ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைக்கான குழு, ஐ.நா. சபைக்கு, போர்காலக் குற்றங்களை விசாரித்து நீnullதி வழங்கிடக் கோரி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையை உறுப்புநாடுகளில் ஒன்று விசாரிக்குமாறு வலியுறுத்தி ஐ.நா.வின் ஒப்புதலைப் பெற வேண்டும். அத்துடன் இலங்கை அரசும் பகிரங்க விசாரணைக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.
1950 களில் தொடங்கிய இலங்கை வாழ் தமிழ் பேசும் குடிமக்கள், மனித உரிமை, ஜனநாயக உரிமைகளைக் கோரி பலவகை இயக்கங்களை நடத்தி வந்துள்ளனர். இலங்கை அரசு, இனச் சிக்கலைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு, ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஏவியதால், 2007 முதல் 2009 வரையில், அது ஒரு உள்நாட்டுப் போராக மாற்றமடைந்தது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் போர் எனப் பிரகடனப்படுத்தி, முப்படைகளையும், இலங்கைத் தமிழ் மக்களை ஒடுக்கப் பயன் படுத்தப்பட்டது. பிறநாட்டு ராணுவ தளவாட உதவிகளையும் இலங்கை அரசு பெற்றுப் பயன்படுத்தி வந்தது.
இலங்கைத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் முற்றுகையிடப்பட்டு, முப்படைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது. சில லட்சம் தமிழ் மொழி பேசும் குடிமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.
2009 இறுதிக்கட்டத்தில், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்த போராளிகள், ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, போர் நிறுத்தத்திற்கும், சமரசப் பேச்சுவார்த்தைக்கும் தூது அனுப்பி, செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வாகனத்தில், வெள்ளைக் கொடியுடன் சென்ற, நடேசன் எனும் போராளியை, நடுவழியில் ராணுவம் நிறுத்திச் சுட்டுக் கொன்றது.
அவரது மனைவி சிங்களப் பெண் என்பதால், அவரையும் தமிழனை மணந்ததற்காகக் கொன்று துண்டு துண்டாக உடம்பை வெட்டி வீசியதையும், விசாரணைக் குழு சுட்டிக் காட்டியிருக்கிறது.
அதே நாளில், பெரும் தாக்குதல் நடக்கப் போவதால், பாதுகாப்பு முகாமுக்கு வருமாறு அழைக்கப்பட்டதால் வந்து கூடிய 40,000 குடிமக்கள் மீது குண்டுகளைப் போட்டு அனைவரையும் கொன்றழித்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இவற்றை இலங்கை அரசு மறுக்கலாம், இந்திய அரசு தெரியாது எனக்கூறலாம்... ஆதாரங்கள் கேட்கலாம்... எனவே தான், ஐ.நா.சபையின் மேற் பார்வையில் ஒரு பகிரங்க விசாரணைக் குழுவை அமைத்து, சம்பந்தப் பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் எழுந்துள்ளது.
இந்திய அரசைப் பொறுத்தமட்டில், அது தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சகல கட்சிகளும், தமிழ்நாடு சட்டமன்றமும் விடுத்த போர்க்கருவிகளை தர வேண்டாம் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்கவே இல்லை.
சர்வகட்சி தூதுக்குழு நேரில் சென்று தமிழக முதல்வர் தலைமையில் வேண்டிய பிறகும் ஆயுத தளவாடங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது. அதுவும் போதாதென்று போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த பிறகும், இலங்கை அதிபரை இந்தியாவிற்கு அழைத்து மரியாதை செய்தது, இந்தியத் தமிழ்மக்களையும் இலங்கைத் தமிழ் மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், ஐ.நாவின் குழுவே விசாரணை கோருவதால், இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இந்திய அரசு, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க வலியுறுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்துகிறோம்.
இந்தக் கட்டத்திலாவது இந்திய அரசு தமிழ் மக்களின் வேதனை மிக்க உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிரங்க விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். பகிரங்க விசாரணையின் போது செய்தியாளர்கள், ஊடகங்கள், அதில் பங்கேற்க முழு அனுமதி வேண்டும்.
ஆளும் பொறுப்பிலுள்ள காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும், இது பற்றி உறுதியான, தெளிவான நிலையை எடுக்கத் தவறினால், இந்திய ஒருமைப்பாட்டு உணர்வுக்கே ஆபத்து விளையும் என்பதை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற வீர்களைப் பலிகொடுத்த பொறுப்புள்ள தேசபக்திமிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழ் மக்கள், ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து, சொந்த சகோதரர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதற்கு nullநீதி கேட்கும் இப்போராட்டத்தில் அணிதிரளவும் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.