எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, மே - 2 - ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஐ.பி.எல். போட்டித் தொடரின் 37-வது போட்டியில் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் பால் வல்தாட்டி ஆகியோர் களமிறங்கினர். ஆனால் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத கொல்கத்தா ஆடுகளத்தில் ரன் எடுக்க துவக்க ஆட்டக்காரர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் கில்கிறிஸ்ட் வேகப்பந்து வீச்சை சமாளித்து தனது வழக்கமான அதிரடி மூலம் ஓரளவு ரன்களைச் சேர்த்தார். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுவந்தார் காம்பீர். இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. அதுவரை அதிரடியாக ஆடாத வல்தாட்டி, யூசுப்பதானின் பந்தை தூக்கி அடித்தார். ஆனால் பந்து நேராக மனோஜ் திவாரியின் கையில் கேட்ச்சாக மாறியது. அப்போது பஞ்சாப் அணி 4.3 ஓவர்களில் 32 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக மார்ஷ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 40 ஆக இருந்தபோது மார்ஷ் 5 ரன்களே எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இந்த நிலையில் ஓரளவு நல்ல முறையில் ஆடிக்கொண்டிருந்த கில்கிறிஸ்ட், சுழற்பந்து வீச்சாளர் இக்பால் அப்துல்லா விக்கெட்டிற்கு நேராக வீசிய பந்தை சரியாக கணிக்காமல் மட்டையை சுழற்ற அந்த பந்து மட்டையில் படாமல் கில்கிறிஸ்ட்டின் கால்களுக்கு இடையில் சென்று விக்கெட்டை பதம்பார்த்தது. 27 பந்துகளில் 26 ரன்களை எடுத்த கில்கிறிஸ்ட் அவுட்டானது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அப்போது பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 7.5 ஓவர்களில் 44 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்துவந்த நாயரும் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ஹஸ்ஸி, தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஓரளவு ரன்களை எடுத்தது. ஆனாலும் அதிரடியாக ரன் குவிக்க இவர்களாலும் முடியவில்லை. இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 15 ஓவரில் 86 ஆக இருந்தபோது ஹஸ்ஸி, அப்துல்லாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிபுல் சர்மா கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் ஒன்று இரண்டாக ரன்களை சேர்க்க பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 117 ரன்களை எடுத்திருந்தபோது கார்த்திக் ரன் அவுட் ஆனார். இவர் 42 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். இவரைத் தொடர்ந்து குமார் களமிறங்கினார். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டும் எடுத்தது. பிபுல் சர்மா ஆட்டமிழக்காமல் 16 ரன்களையும், குமார் 2 ரன்களையும் எடுத்திருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் இக்பால் அப்துல்லா 19 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், யூசுப் பதான் சிக்கனமாக பந்துவீசி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. துவக்க ஆட்டக்காரர்களாக காலிஸ் மற்றும் மோர்கன் ஆகியோர் களமிறங்கினர். அதிர்ச்சியளிக்கும் வகையில் காலிஸ் 1 ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் பட்டின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் பஞ்சாப் அணி சற்று தெம்படைந்தது. அடுத்து மோர்கனுடன் கேப்டன் காம்பீர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ரன்களைச் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 4.2 ஓவரில் 35 ரன்களை எடுத்திருந்தபோது மோர்கன், பட்டின் பந்திலேயே ஹாரிசால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 28. இவரை அடுத்து மனோஜ் திவாரி களமிறங்கினார். மனோஜ் திவாரியும் காம்பீரும் சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டனர். இவர்கள் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இதனால் கொல்கத்தா அணியின் இலக்கு எளிதானது. இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இந்நிலையில் 17.2 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 120 ரன்களை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றியைப் பெற்றது. காம்பீர் ஆட்டமிழக்காமல் 44 ரன்களையும், திவாரி 34 ரன்களையும் எடுத்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பாக பட் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய இக்பால் அப்துல்லா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 8 போட்டிகளின் முடிவில் 10 புள்ளிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.