எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்- வாஷிங்டன், மே 3-சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் நேற்று பாகிஸ்தானில் சுட்டுக்கொன்றனர்.சுமார் 10 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த அல் கொய்தா இயக்க தலைவன் பின்லேடனின் கதை இத்துடன் முடிந்தது. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதலை நடத்தினர். நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக இரட்டை கோபுரம், வாஷிங்டனில் உள்ள பெண்டகன் எனப்படும் அமெரிக்க ராணுவ தளம் ஆகியவற்றின் மீது விமானங்களை மோத விட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று அல் கொய்தா கூறியது. இந்த சம்பவத்தினால் திக்கு முக்காடிப்போன அமெரிக்கா உலகில் தீவிரவாதிகளே இருக்கக்கூடாது என்று கூறி சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு போருக்கு அழைப்பு விடுத்தது. இந்த தாக்குதல்களுக்கு காரணமான சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் தங்கியிருக்கிறான் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடந்த 2002 ம் ஆண்டு முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா நடத்தியது. இந்த போரில் அமெரிக்க ஆதரவு நாடுகளும் குதித்தன. நீண்ட காலம் போர் நடந்தும் கூட ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகளால் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள அபோடாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ஒசாமா பின்லேடனும் அவனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளும் தங்கி இருப்பதாக அமெரிக்க உளவுப் படையான சி.ஐ.ஏ.வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க ராணுவத்தின் மூன்று ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் வந்தன. பாகிஸ்தான் ராணுவத்திற்கே தெரியாமல் பின்லேடன் தங்கியிருந்த சொகுசு மாளிகை மீது நேற்று அதிகாலை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் வந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலின்போது அந்த விடுதியில் இருந்த அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அதனால் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் நடத்திய தாக்குதல் பலருக்கு தெரியவில்லை. பின்லேடனின் அரேபிய மெய்க்காப்பாளர்கள்கூட இதை சற்றும் எதிர்பார்க்காமல் சிறிது நேரம் கழித்தே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது பின்லேடன் ஆதரவாளர்களுக்கும் அமெரிக்க அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அமெரிக்க வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். மேலும் பின்லேடனின் இளைய மகன் உள்ளிட்ட மேலும் 3 பேரும் இந்த தாக்குதலில் பலியானார்கள். கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடலை அமெரிக்க வீரர்கள் ஹெலிகாப்டரில் ஏற்றி அண்டை நாடான ஆப்கானிஸ்தானிற்குள் கொண்டு சென்றனர். மேலும் பின்லேடனின் இளைய மனைவி உள்ளிட்ட உள்ளிட்ட சிலரையும் அவர்கள் கைது செய்து அதே ஹெலிகாப்டரில் கொண்டு சென்றனர். இந்த தகவலை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் இதை ஒப்புக்கொண்டுள்ளது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் இது நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி மூலம் நேரடியாக மக்களுக்கு அறிவிப்பு செய்தார். கடந்த 10 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடனின் கதை இத்துடன் முடிவுக்கு வந்தது. 54 வயதான ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவனது உடல் அமெரிக்க ராணுவ வீரர்களின் காவலில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பாரக் ஒபாமா தெரிவித்தார்.
இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து சேனல்களிலும் பரபரப்பாக ஒளிபரப்பானது. பின்லேடன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்த அமெரிக்கர்கள் கும்மிருட்டு நேரத்திலும் வெள்ளை மாளிகை முன் பெருமளவில் திரண்டு ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட பின்லேடனின் உடல் பிறகு இஸ்லாமிய முறைப்படி வளைகுடா பகுதியில் கடலுக்கு அடியில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பின்லேடனின் சடலத்தை வேறு எங்காவது நிலப்பகுதியில் புதைத்தால் தீவிரவாதிகள் அல்லது அவரது ஆதரவாளர்கள் அந்த இடத்தை ஒரு நினைவிடமாக ஆக்கிவிடலாம் என்பதால் பின்லேடனின் உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.