எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.16 - பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். நேற்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். திரைப்படத்துறைக்கென்றே அவதாரம் எடுத்தது போல 1955 ஜூலை 31 ஆம் தேதியில் பிறந்த இயக்குனர் மணிவண்ணன், ஜூன் 15, 2013 தனது 30 வருடங்களுக்கும் மேலான திரைவாழ்க்கையைத் தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்த பெருமிதத்துடன் மாரடப்பால் இயற்கை எய்தினார்.
மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் டைரக்டு செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும்.
பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றி கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து கடந்த மாதத்தில் தனது 50-வது படமாக நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏவை இயக்கியவர் இயக்குனர் மணிவண்ணன்.
தமிழ்சினிமாவின் தலைசிறந்த ஒரு கோபுரம் சாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அதுமிகையாது. ஆனாலும் இவர் இயக்கிய படங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைப்படங்கள் இயக்க வருபவர்களுக்கும் என்றும் சாயாத கலங்கரைவிளக்களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை 1982-ல் முதன்முதலாக டைரக்டு செய்தார்.
பாரதிராஜாவின் பலபடங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றிய இயக்குனர் மணிவண்ணனை தனது கொடிபறக்குது படம் மூலம் நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
நிழல்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். வில்லன், துள்ளாத மனமும் துள்ளும், குருவி, தம்பி, எங்கள் அண்ணா, பம்மல் கே.சம்பந்தம், மாயி, படையப்பா, கொடி பறக்குது, தாய்மாமன் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்துள்ளார்.தொடர்ந்து குணச்சித்திர நடிகராக, வில்லனாக மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கும் இவரது வெற்றிக் கொடி.
கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ. என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.
இயக்குனர் மணிவண்ணன் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் சத்யராஜை வைத்து 25 படங்கள் இயக்கியவர். இவர்களது கூட்டணி தமிழ்சினிமாவில் வசூலைக்குவிக்கும் கூட்டணி என்றால் அது மிகையாகாது. அதற்கு இவர்களது கூட்டணியில் கடந்த மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற நாகராஜசோழன் படமும் மிகப்பெரிய உதாரணம்.
இயக்கத்துடன் சிறந்த வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றிருக்கும் மணிவண்ணன் ,கோயமுத்தூர் வார்த்தைகளைப் பிரபலப்படுத்தியதில் இளையதளபதி விஜய்க்கே முன்னோடி எனலாம்.
அரசியலில் மிகுந்த நாட்டமுடைய மணிவண்ணன் ஆரம்பகாலத்தில் வைகோவுடனும் பின்பு சீமானுடன் இணைந்து நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். மனதில் பட்டதை வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட இயக்குனர் மணிவண்ணன், ஈழத்தமிழர் படுகொலையில் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் விழைவித்து விட்டது என்று நாம் தமிழர் கட்சிக்கூட்டங்களில் மேடைக்கு மேடை முழங்கினார்.
சமீபத்தில் நடந்த மறுமுகம் படத்தின் பாடல்வெளியீட்டு விழாதான் மணிவண்ணன் கலந்து கொண்ட கடைசித் திரைப்படவிழாவாகும். அந்த மேடையில் பேசிய மணிவண்ணன், தனது குரு நாதர் பாரதிராஜாவுக்கும் தனக்கும் இடையே இருந்த குரு சிஷ்யன் உறவினையும், இருவருக்குமிடையே ஏற்ப்பட்ட சுவராஸ்யமான சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார். அதே மேடையில் தனக்கு சினிமாவைத் தவிர வேறொன்றும் தெரியாது என்று அவர் குறிப்பிட்டது நினைவு கூறத்தக்கது.
அன்னாரது மறைவிற்கு நாம்தமிழர் கட்சியின் நிறுவனரும் இயக்குனர் நடிகருமான சீமான் ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் நடிகர் சத்யராஜ் மற்றும் ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
இயக்குனர் மணிவண்ணனின் உடல் சென்னை ராமாவரம் ஜெய்பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்றுநடக்கிறது.
மறைந்த இயக்குனர் மணிவண்ணன் உடலுக்கு நடிகர் சத்தியராஜ், இயக்குனர் மனோபாலா, சுந்தர்.சி, சிபராஜ், எம்.எஸ்.பாஸ்கர், விடுதலை சிறுத்தலைவர் திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கொளத்தூர் மணி, இயக்குனர்கள் சீமான், விக்கரமன், ஆர்.கே.செல்வமணி, பி.எல்.தேனப்பன் மற்றும் நடிகை, நடிகைகள், இயக்குநர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்பொழுது? - தேர்வு வாரியம் அறிவிப்பு
04 May 2024சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024