எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.2 - மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ள இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரையே ஆளுவதற்கு உரிமைப் பெற்றுள்ள அரசு, இதைச் செய்வதற்கு தார்மீக உரிமையும், அதிகாரமும் கிடையாது என்றும், இந்த விலை நிர்ணயத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப்பின் உருவாகும் மத்திய அரசு இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. எடுக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இரண்டாம் முறையாக 2009-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார மேம்பாட்டிற்கும், தொழில் உற்பத்திக்கும், விவசாய உற்பத்திக்கும் மற்றும் மக்களின் வளத்திற்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், கொள்கை முடிவுகளை எடுக்காமல் கொள்கை முடக்குவாதத்தில் இருந்து வந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எந்த வித கொள்கை முடிவுகளையும் எடுக்க திராணியற்று இருப்பதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தும், சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்திய பொருளாதார மதிப்பீட்டை குறைத்துவிடும் என்ற அச்சத்திலும் பங்கு சந்தை வீழ்ச்சியாலும், அச்சமடைந்து, அவசர கதியில் பல்வேறு புதிய கொள்கை முடிவுகளை, சீர்திருத்தங்கள் என சொல்லப்படும் பொருளாதார சீர்கேட்டுக் கொள்கைகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சமீப காலமாக எடுத்து வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து, அடுக்கடுக்காக எடுக்கப்படும் புதிய கொள்கை முடிவுகள் அனைத்தும் சாமானிய மக்களை வஞ்சிப்பதாகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளன. கொள்கை முடக்குவாதத்திலிருந்து அளவுக்கு அதிக கொள்கை என்று சொல்லக் கூடிய வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு நாளும் புதுக் கொள்கைகளை அறிவித்து வருகிறது. பெட்ரோலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளுதல்; மாதாமாதம் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுதல்; டீசல் விலையுடன் ரயில்வே சரக்கு கட்டணத்தை இணைத்துக்கொள்ளுதல்; அதன் வாயிலாக ரயில் சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுத்தல்; மானிய விலையிலான வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை வருடத்திற்கு முதலில் 6 என்றும், பிறகு 9 என்றும் நிர்ணயித்தது; அந்நிய செலாவணி சந்தையில் பலரும் பங்குபெறுதலை ஊக்குவித்தல்; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல்; ஊட்டச்சத்துடன் இணைந்த உரக்கொள்கை; மானியத்திற்கு பதிலாக நேரடி பண மாற்றம்; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது போன்ற எண்ணற்ற மக்கள் விரோதக் கொள்கைகளை சமீப காலத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது. இந்த கொள்கைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மானியங்களை கட்டுப்படுத்துவதற்கும், சமூகப் பாதுகாப்புக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை குறைப்பதற்கும் தான் வழிவகுத்தன. மேலும், பெருந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபம் அடையவே இந்த கொள்கைகள் வழிவகை செய்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது, இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் நிர்ணயித்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜனின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான சராசரி விலை, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக மையங்களில் உள்ள சராசரி விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒரு சிக்கலான வழிமுறையை இந்தக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிடும் பொழுது ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை தற்போதுள்ள 4.2 டாலர் என்ற அளவிலிருந்து 8.4 டாலர் என்ற அளவில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு விலையை உயர்த்துவது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இயற்கை எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நடவடிக்கை என கூறிக்கொண்டு, ஒரு பெரும் தொழில் நிறுவன குழுமத்திற்கு சலுகை அளிப்பதாகவே அமைந்துள்ளது. அந்த தொழில் நிறுவனம் தனது ஓஎ ஈ 6 படுகையில் உற்பத்தி செய்ய உத்தரவாதம் அளித்ததற்கும் மிகக் குறைந்த அளவிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கு தண்டனை அளிக்கப்படுவதற்கு பதிலாக, மிகப் பெரும் லாபம் அடையவே இந்த புதிய கொள்கை வழிவகுக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, கொள்கை அடிப்படையில், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதற்கு ஊக்கம் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் யூரியா தயாரிக்கும் உர நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 81 சதவீதம் இயற்கை எரிவாயுவையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதே போன்று பல மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் எரிபொருளாக இயற்கை எரிவாயுவையே பயன்படுத்துகின்றன. போதிய அளவு இயற்கை எரிவாயு கிடைக்காத காரணத்தினால் அகில இந்திய அளவில் 28000 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு உள்ளது. இயற்கை எரிவாயு விலை 8.4 டாலர் என்ற அளவுக்கு அதிகரிக்கும் போது இந்த மின் உற்பத்தி நிலையங்களும் யூரியா தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இல்லையெனில் யூரியா போன்ற உரம் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர வழிவகுக்கும். இந்த விலை உயர்வை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்கள் தான் தாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் விலை கொள்கையே தவறு என்று நான் பல முறை சுட்டிக்காட்டி வருகிறேன். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, அவற்றை சுத்திகரிக்க ஏற்படும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று நான் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். ஆனால் மத்திய அரசு 'வர்த்தக சமநிலை விலை' என்ற ஒரு செயற்கையான விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கும் இது போன்று செயற்கையான விலை நிர்ணயம் செய்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கு உற்பத்தி செய்யப்படும் விலையை மட்டும் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டால் தான் உரம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களும், இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மின் நிறுவனங்களும் குறைந்த விலையில் இவற்றை மக்களுக்கு வழங்க இயலும். மேலும், இயற்கை எரிவாயு விலை ரூபாய் மதிப்பில் தான் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அமெரிக்க டாலர் மதிப்பில் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் தனிப்பட்ட எவருடைய சொத்தும் அல்ல. இவை இந்திய மக்கள் அனைவருக்கும் உரித்தான பொதுச் சொத்து. இந்த இயற்கை வளங்களின் உண்மையான சொந்தக்காரர்கள் பொதுமக்கள் தான். இந்த இயற்கை வளங்கள் அரசு கொள்கைகளால் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே மத்திய அரசு இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 2014ம் ஆண்டு மே மாதம் வரையே மக்களால் ஆட்சிப் பொறுப்பை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த வித தார்மீக அதிகாரமும் கிடையாது. எனவே அடுத்த ஆண்டு மத்தியில் அமையப் பெறும் புதிய அரசு இதை நிர்ணயம் செய்வதே சரியானதாகும். மத்திய அரசு விடாப்பிடியாக இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை திரும்பப் பெறவில்லையெனில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின் உருவாகும் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலையை அடையும். எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.