எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இட்டாநகர்,மே.5 - கடந்த சனிக்கிழமையன்று ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டுவின் கதி என்னவாயிற்று என்பது பற்றி இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. நேற்று கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு அவர் விபத்தில் சிக்கி பலியானது ஊர்ஜிதமாகி இருக்கிறது. முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் லபோத்தாங் என்ற பகுதியில் விபத்துக்குள்ளானதில் முதல்வரின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பது ஒருவழியாக கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற மேலும் 4 பேரும் இந்த விபத்தில் சிக்கி உடல் சிதைந்து பலியானார்கள். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை போல டோர்ஜிகாண்டுவும் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அதிர்ச்சி அலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.
விபத்துக்கள் என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. நடந்து சென்றாலும் விபத்து ஏற்படுகிறது. சரி, பஸ்சில் செல்வோம் என்று பஸ்சில் பயணம் செய்தாலும் தறிகெட்டு செல்லும் டிரைவர்களால் விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின்றன. ரயிலில் பயணம் செய்வோமே என்று நினைத்து பயணம் செய்தால் அந்த ரயிலும் கூட விபத்தில் சிக்கி விடுகிறது. இதனால் வசதி உள்ளவர்கள் விமானத்தில் போகிறார்கள். ஆனால் விமானங்களும் நடுவானில் மோதிக் கொள்கின்றன. அல்லது ஏதேனும் ஒரு வகையில் விபத்தில் சிக்கி விடுகின்றன. சில விமானங்கள் தரையிறங்கும் நேரத்தில் கூட விபத்துக்கு உள்ளாகி விடுகின்றன. கர்நாடக மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஒரு விமானம் தறிகெட்டு ஓடி மலைப்பகுதிக்குள் விழுந்து கிட்டத்தட்ட 160 பேர் அப்போது பலியானார்கள். இப்படி எல்லா மார்க்கத்திலும் விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன் ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நலமுல்லா வனப் பகுதியில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கி தீப்பிடித்தது. இதில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் இவர். இந்த நிகழ்ச்சி நடந்து சில மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் மற்றொரு முதல்வர் பலியாகி விட்டார் என்பதுதான் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்.
அருணாசல பிரதேச முதல்வராக இருந்தவர் டோர்ஜிகாண்டு. இவர் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தவாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இட்டாநகர் நோக்கி புறப்பட்டார். காலை 9.50 மணிக்கு இவரது ஹெலிகாப்டர் புறப்பட்டது. 2 மணி நேரத்தில் இவர் இட்டாநகர் போய்ச் சேர வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடத்திலேயே அந்த ஹெலிகாப்டர் தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஹெலிகாப்டரை பதட்டத்துடன் தேடினார்கள். சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பூடானில் அது தரையிறங்கியதாகவும் முதல்வர் உள்ளிட்ட 5 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த தகவல் மறுநாளே பொய்த்துப் போனதுதான் வேதனைக்குரிய விஷயம். முதல்வர் காண்டு சென்று ஹெலிகாப்டர் பூடானில் தரையிறங்கவில்லை. இது உறுதியானதும் ராணுவ அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் அங்குள்ள வனப்பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று பரபரப்போடு தேடினார்கள். இந்த தேடும் பணி கிட்டத்தட்ட 4 நாட்கள் நீடித்தது. 4 நாட்கள் வரை முதல்வர் என்னவானார் என்பது பற்றி தெரியவே இல்லை. கடைசியாக நேற்று முன்தினம் முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை நோக்கி மீட்பு குழுவினர் விரைந்தனர்.
4 நாட்கள் வரை முதல்வரோ அல்லது மற்றவர்களோ உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஹெலிகாப்டர் விழுந்த இடம் நோக்கி மீட்பு குழுவினர் சென்றனர். அப்போது முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் தெரியவந்து அங்கு சென்ற போது முதல்வரின் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற பைலட்டுகள் பாபர், மம்மிக் ஆகியோரும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி யஷீசடோக் என்பவரும் தவாங் எம்.எல்.ஏவின் சகோதரி யஷீலாமூ என்பவரும் அங்கு சிதைந்த நிலையில் பலியாகி கிடந்தனர்.
பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி. முகுத்பித்தி முதல்வர் பலியானதை உறுதி செய்தார். முன்னதாக அந்த பகுதி கிராமவாசிகள் விழுந்த கிடந்த ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களையும், அழுகிய நிலையில் கிடந்த உடல்களையும் கண்டு பிடித்து காலை 10 மணியளவில் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த இடம் ஷீலாபாஸ் என்ற இடத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு அருவி ஒன்று உள்ளது. அந்த அருவியின் பெயர் ஜோங் என்பதாகும். இந்த இடத்தில் இருந்துதான் ஹெலிகாப்டருடனான தொடர்பு கடைசியாக துண்டிக்கப்பட்டது. அந்த இடத்தில் முதல்வரும் மற்றும் நால்வரும் பலியானதை கிராமவாசிகளுடன் சேர்ந்து முகுத்பித்தி எம்.பி. ஊர்ஜிதம் செய்தார்.
டெல்லியில் இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் ஊர்ஜிதம் செய்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டோர்ஜிகாண்டு பலியானதை உறுதி செய்தார். இவர் மட்டுமின்றி அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டுவின் உறவினரும், பஞ்சாயத்து தலைவருமான மற்றொரு நபரும் டோர்ஜிகாண்டுவின் உடலை அடையாளம் கண்டறிந்து கூறினார். இந்த தகவலை மற்றொரு மத்திய அமைச்சரான ஹேன்டிக் தெரிவித்தார். இது பற்றி இட்டாநகரில் கூறிய அவர்,
பஞ்சாயத்து தலைவர் துப்தென், முதல்வரின் உடலை அடையாளம் கண்டறிந்து கூறியதாக தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலியான டோர்ஜிகாண்டுவுக்கு வயது 56. இவரது உடல் மட்டுமின்ற மற்ற நால்வரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போயிருந்தன. இது பார்த்தவர் மனதை பதற வைத்தது. உருக வைத்தது. சம்பிராதயங்கள் அனைத்தும் பூர்த்தியான பிறகே அதிகாரபூர்வமாக தாங்கள் இச்செய்தி தெரிவிப்பதாக அமைச்சர் ஹேண்டிக் மேலும் தெரிவித்தார். அருணாசல பிரதேச முதல்வர் பலியானது அம்மாநிலத்தில் உள்ள மக்களை துயரக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆந்திர மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்த புட்டபர்த்தி சாய்பாபா தனது 85 வது வயதில் காலமானார். அந்த சோகம் முடிவதற்குள் இப்போது மற்றொரு சோகம் நிகழ்ந்து விட்டது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். அருணாசல பிரதேச முதல்வர் பலியானதற்கு தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் பலியான முக்கியமானவர்கள்:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
என்.வி.என்.சோமு
மாதவராவ் சிந்தியா
ஜி.எம்.சி.பாலயோகி
செளந்தர்யா
ஹரியானா மின்துறை அமைச்சர்
ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி
ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் தப்பிப் பிழைத்த முக்கிய புள்ளிகள்:
மொரார்ஜி தேசாய்
அகமது பட்டேல்
பிரிதிவிராஜ் சவான்
ராஜ்நாத்சிங்
முக்தர் அப்பாஸ் நக்வி
அசோக் கெல்லட்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.