எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கரை ஆகஸ்ட் 21 ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சதியை வெளிக்கொணர பூஜா கேத்கரை ஏன் காவலில் எடுக்க வேண்டும் என்பதற்கு பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் நேற்று (அக்.12) தீர்ப்பளித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “பூஜா கேத்கரை உடனடியாகக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை பார்த்தேன். என்ன குற்றம் நடந்ததோ அதில் இருந்து விசாரணை நீதிமன்றம் தடுமாறிவிட்டது. ஏன் ஜாமீன் வழங்க வேண்டும் அல்லது ஏன் வழங்கக்கூடாது என்பதற்கு பதில் இல்லை. தற்போதைய நிலையில், அடுத்த விசாரணை தேதி (ஆகஸ்ட் 21) வரை மனுதாரரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கர், தனக்கு முன்ஜாமீன் மறுத்த மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்துள்ளது. நடந்தது என்ன? - கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் பூஜா மனோரமா திலீப் கேத்கர். இவர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
பார்வைக் குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவை தனக்கு உள்ளதாகக் கூறி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரி அவர் விண்ணப்பித்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் புனேயில் அவர் உதவி ஆட்சியராக இருந்தபோது, பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் பூஜா சிக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின், அவர் தொடர்பான முழு விவரங்களை ஆய்வு செய்ய மத்திய பணியாளர் துறையின் கூடுதல் செயலர் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பிபிஎஸ் படிப்பதற்காக 2007-ம் ஆண்டில் அவர் ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மாற்றுத் திறனாளி இல்லை என்று அவர் எம்பிபிஎஸ் படித்த கல்லூரியின் இயக்குநர் தெரிவித்தார். 2007-ம் ஆண்டில் புனேயில் உள்ள காஷிபாய் நவாலே மருத்துவக் கல்லூரியில் பூஜா கேத்கர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். இத்தகைய புகார்கள் காரணமாக பூஜா கேத்கர் மீது மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வழக்குப் பதிவு செய்தது. மேலும், 2022-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கான அவரது விண்ணப்பத்தை ரத்து செய்வதற்கான சோகாஸ் நோட்டீஸையும் (எஸ்சிஎன்) பிறப்பித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 6 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 2 days ago |
-
முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக கோரிக்கை மனு
16 Sep 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் வி.சி.க.
-
இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் விலை திடீர் உயர்வு
16 Sep 2024சென்னை, எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
டெல்லியின் அடுத்த முதல்வா் அதிஷி ?
16 Sep 2024புதுடெல்லி, அடுத்த 2 நாள்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
கடல்சார் வணிகத்தின் முக்கிய மையமாக தமிழகம் மாறியுள்ளது : பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
16 Sep 2024புதுடெல்லி : 3 பெரிய துறைமுகங்கள், பதினேழு சிறு துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கடல்சார் வணிகத்தின் முக்கிய மையமாக தமிழகம் மாறியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
-
நிபா வைரசால் இளைஞர் பலி: பொது மக்கள் விழிப்புடன் இருக்க கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Sep 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரசால் உயிரிழந்ததை அடுத்து, பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
-
தாழ்த்தப்பட்டவர்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பு: சமஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு
16 Sep 2024லக்னோ, அயோத்தியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவுடனும், பாதுகாப்புடனும் தொழிலதிபர்கள் ஆக்கிரமித்து வருவதாக சமா
-
ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளாவில் ஒரு நாளில் மட்டும்: ரூ.124 கோடிக்கு மது விற்பனை
16 Sep 2024திருவனந்தபுரம், ஓணம் பண்டிகை எதிரொலியாக கேரளாவில் ரூ.124 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
-
மதுஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பதாக உறுதி: தி.மு.க.-வி.சி.க. உறவில் எந்த விரிசலும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
16 Sep 2024சென்னை, “தி.மு.க. - வி.சி.க. இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம்.
-
தமிழக மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசின் செயலுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
16 Sep 2024சென்னை, தமிழக மீனவர்களுக்கு மொட்டை போட்ட இலங்கை அரசின் கொடூர செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ராமசாமி படையாட்சியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
16 Sep 2024சென்னை, ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
6.6 ரிக்டர் அளவில் கனடாவில் நிலநடுக்கம்
16 Sep 2024போர்ட் மெக்நீல், கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
-
2-வது முறையாக கொல்ல முயற்சி: டொனால்டு ட்ரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
16 Sep 2024ப்ளோரிடா, அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச்
-
ராணிப்பேட்டையில் ரூ.9 ஆயிரம் கோடியிலான கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
16 Sep 2024சென்னை, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார
-
யாகி புயலால் கடும் பாதிப்பு: மியான்மர், வியட்நாமுக்கு இந்தியா நிவாரண உதவி
16 Sep 2024புதுடெல்லி, யாகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாமுக்கு இந்தியா நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் ராகுல்
16 Sep 2024புதுடெல்லி, ராகுல்காந்தி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை டெல்லி திரும்பினார்.
-
விடுதி அறையில் மாட்டிறைச்சி சமையல்: 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
16 Sep 2024பெர்ஹாம்பூர், ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்
-
போராடி வரும் பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் முதல்வர் மம்தா: இதுவே கடைசி முயற்சி என்றும் அறிவிப்பு
16 Sep 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள, அம்மாநில அரசு இதுவே கடைசி முயற்சி எனக்கூறியுள்ளது.
-
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட ரயான் யார் ?
16 Sep 2024அமெரிக்கா, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரயான் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பெண்கள் கை காட்டியும் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட்
16 Sep 2024குமரி, பெண்கள் கை காட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
பூமியை சுற்றும் புதிய மினி நிலவு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
16 Sep 2024வாஷிங்டன், பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
-
சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியாகும் ராமம்ராகவம்.
16 Sep 2024தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம்ராகவம் படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.
-
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
16 Sep 2024மேட்டூர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து
16 Sep 2024சென்னை, இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை குறித்து பேச்சு: கேரள மாநில அரசியல் கட்சிகளை கண்டித்து செப். 22-ல் போராட்டம்
16 Sep 2024கூடலூர், முல்லைப்பெரியாறு அணை குறித்த பேச்சு:கேரள அரசியல் கட்சியினரை கண்டித்து வரும் 22-ம் தேதி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
கடந்த 10 ஆண்டில் ரெயில் விபத்துகளில் 748 பேர் பலி: இந்திய ரெயில்வே அதிர்ச்சி தகவல்
16 Sep 2024புதுடெல்லி, இந்தியாவில் ரெயில் விபத்துகளும் அதனால் ஏற்படும் மக்களின் உயிரிழப்புகளும் தொடர்கதையாக உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் சுமார் 748