எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இம்பால் : மணிப்பூரில் 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி ஆகிய இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், அவ்வப்போது வன்முறை சம்பவம் ஏற்பட்டு பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த சூழலில் முதல்-மந்திரி பிரேன் சிங் நேற்றுமுன்தினம் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் தெங்னவுபால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து படையினர் கடந்த சில நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதில், கங்லிபாக் கம்யூனிஸ்டு கட்சி (அபுன்பா) என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேரை, இம்பால் மேற்கு மாவட்டத்தின் ரூப்மகால் டேங் பகுதியில் வைத்து படையினர் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இவர்கள் மிரட்டி, பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து, நவீன ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர். படையினரின் மற்றொரு நடவடிக்கையில், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி (கொய்ரெங்) என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று தெங்னவுபால் மாவட்டத்தில் எல் மினவ் ரிட்ஜ்லைன் பகுதியில் செயல்பட்டு வந்த கே.சி.பி. (தைபங்கன்பா) என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் நேற்றுਸ੍ਸ தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 9 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, எல்.எம்.ஜி. ரக துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். துப்பாக்கி, இன்சாஸ் ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கி போன்ற நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிக்க தயார் நிலையில் உள்ள துப்பாக்கி குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி
16 Mar 2025சென்னை : பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த டிராகன் விண்கலம்
16 Mar 2025வாஸிங்டன் : சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
-
பூமி திரும்பியதும் சுனிதா வில்லியம்ஸ் உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு
16 Mar 2025புளோரிடா : அடுத்த வாரம் பூமிக்கு திரும்ப உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்.
-
எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்
16 Mar 2025சென்னை : எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் நேற்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.
-
ஹெல்மெட் அணியாமல் பயணம்: லாலு பிரசாத் மகனுக்கு அபராதம்
16 Mar 2025பாட்னா : லாலு பிரசாத் யாதவின் மகனுக்கு பீகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-03-2025
16 Mar 2025 -
முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவை : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
16 Mar 2025நாக்பூர் : முஸ்லிம் சமூகத்தினருக்கு கல்விக்கான அவசரத் தேவை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
-
விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது : த.வெ.க. தலைவர் விஜய் காட்டமான அறிக்கை
16 Mar 2025சென்னை : இனி இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
16 Mar 2025சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
-
அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை: அமைச்சர் சேகர்பாபு
16 Mar 2025சென்னை : விலாசமற்ற மற்றும் மக்களின் ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை தாக்கிய பலூச் தீவிரவாதப் படை : 90 வீரர்கள் பலி?
16 Mar 2025இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை க
-
முகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு
16 Mar 2025சென்னை : பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
16 Mar 2025லாகூர் : ஜம்மு - காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
மேசடோனியாவில் பயங்கர தீ விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
16 Mar 2025கோக்கானி : தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந
-
அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்: செங்கோட்டையன் பேச்சு
16 Mar 2025சென்னை : தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
கர்நாடகாவில் ரூ. 375 கோடி போதைப்பொருள் பறிமுதல் : 2 வெளிநாட்டு பெண்கள் கைது
16 Mar 2025மங்களூரு : கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
-
பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 Mar 2025திருப்பத்தூர் : வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரி
-
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
16 Mar 2025சென்னை : தமிழ்நாட்டு தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்
-
சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்: நடிகை ரன்யா ராவ் கண்ணீர் கடிதம்
16 Mar 2025பெங்களூரு : தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ.) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள
-
வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு: ஐ.நா.சபை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
16 Mar 2025நியூயார்க் : வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகின்றன என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செஞ்சி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
16 Mar 2025விழுப்புரம் : செஞ்சி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
-
தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
16 Mar 2025சென்னை : இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பா
-
அலங்காநல்லூரில் சோகம்: ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலி
16 Mar 2025மதுரை : மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார்.
-
சிரியா: அடிக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 16 பேர் உயிரிழப்பு
16 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-03-2025
16 Mar 2025