எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மே13 - கலைஞர் டி.வி. நிர்வாகத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற கனி மொழியின் வாதத்தை பொய்யாக்கும் விதத்தில் கலைஞர் டி.வி. நிர்வாக விவகாரங்களில் கனிமொழிக்கு ஈடுபாடு உள்ளது என்று அவரது உறவினர்களில் ஒருவரான பி.அமிர்தம் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கான 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இதை அடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் இந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா, சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பிறகு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் ராசாவின் அப்போதைய உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோர் உள்பட மேலும் 8 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடியை அளித்துள்ளது. ஆனால் இந்த பணத்தை தாங்கள் அதே கம்பெனியிடம் திருப்பி செலுத்தி விட்டதாக கலைஞர் டி.வி. தெரிவித்துள்ளது. என்றாலும் இந்த ரூ.200 கோடி எதற்காக கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஊழல் வழக்கில் சி.பி.ஐ.தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ( நிர்வாக இயக்குனர் ) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதை அடுத்து இவர்கள் இருவரும் டெல்லியில் பாட்டியாலா இல்லத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது கலைஞர் டி.வி. நிர்வாக விஷயங்களில் கனிமொழிக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று அவரது சார்பில் வாதாடிய பிரபல வக்கீல் ராம்ஜேத் மலானி வாதாடினார்.
ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் கனிமொழியின் உறவினரான பி.அமிர்தம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இவர் கலைஞர் டி.வி.யில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியவர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரி ( அக்காள் ) பெரிய நாயகத்தின் மூத்த மகன்தான் இந்த பி.அமிர்தம்.
குற்றவியல் சட்டம் ( சி.ஆர்.பி.சி. ) பிரிவு 161 ன் கீழ் இந்த வாக்குமூலத்தை சி.பி.ஐ.யிடம் அமிர்தம் சமர்ப்பித்துள்ளார்.
கலைஞர் டி.வி.யின் அன்றாட விவகாரங்களில் கனிமொழி தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட் என்ற இந்த நிறுவனத்தை தோற்றுவித்த இயக்குனர்களில் கனிமொழியும் ஒருவர் என்று அமிர்தம் கூறியுள்ளார். இருந்தாலும் கடந்த 2007, ஜூன் 20 ம் தேதி இயக்குனர்கள் குழுவில் இருந்து கனிமொழி விலகி விட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வரவேண்டிய அனுமதிகள் காலதாமதமானதால் கனி மொழி தனது இயக்குனர் பதவியிலிருந்து விலகினார். எனினும், கலைஞர் டி.வி.யின் அன்றாட விவகாரங்களில் அவர் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார் என்றும் அமிர்தம் கூறியுள்ளார்.
குற்றவியல் நடைமுறை விதி ( சி.ஆர்.பி.சி. ) எண் 161 ன் கீழ் ஒரு போலீஸ் அதிகாரியின் சாட்சியம் நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவே கனிமொழிக்கு கலைஞர் டி.வி. யில் ஈடுபாடு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக பிற சாட்சியங்களை சி.பி.ஐ. தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அடுத்தே அமிர்தத்திடமிருந்து இந்த சாட்சியம் பெறப்பட்டுள்ளது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயம் பெற்ற டி.பி. குழும கம்பெனியிடமிருந்து ரூ.200 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது. இதை கனிமொழியும் சரத் குமாரும் பெற்றுக்கொண்டனர். அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா காட்டிய சாதகமான சலுகைகளின்படி இந்த ஒதுக்கீடுகளை டி.பி. ரியாலிட்டீஸ் குழுமத்தின் ஒரு நிறுவனமான ஸ்வான் டெலிகாம் பெற்றுள்ளது. எனவேதான் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூலமாக ரூ. 200 கோடி 2008 - 09 ம் ஆண்டில் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளது என்று ஏற்கனவே சி.பி.ஐ.அதிகாரிகள் டெல்லி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
டி.பி. ரியாலிட்டீஸ் குழுமத்திற்கு சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டிடம் இருந்து உத்தரவாதமில்லா கடனாக ரூ. 200 கோடியை கலைஞர் டி.வி.பெற்றுள்ளது. ஆனால் உண்மையில், கலைஞர் டி.வி.யில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை விலைக்கு வாங்கவே இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விட்டது என்று அமிர்தம் கூறியுள்ளார்.
என்றாலும் இந்த ரூ. 200 கோடி கடன் வட்டியுடன் திருப்பி அதே கம்பெனிக்கு திருப்பி செலுத்தப்பட்டு விட்டது என்றும் சி.பி.ஐ.யிடம் அமிர்தம் கூறியுள்ளார்.
கலைஞர் டி.வி.யில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், சரத்குமாருக்கு (நிர்வாக இயக்குனர்)20 சதவீத பங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப