எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.21 - சட்டமன்ற பேரவை செயலகம் உட்பட 36 துறைகளில் 6 துறைகள் மட்டுமே புதிய கட்டடத்தில் இருக்கிறது. எஞ்சிய 30 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளதால் 2 தலைமை செயலகங்கள் நிர்வாக நலனுக்கு ஏற்றதல்ல என்று, புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட முடிவு எடுத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய கட்டடத்தில் 2-வது பிளாக் இன்னும் கட்டி முடிக்க 1 ஆண்டாகும் என்றும், அண்ணாசாலையில் போக்குவரத்து நேரிசலை தவிர்க்க ரூ.500 கோடியில் திட்டமிடப்பட்ட 2 மேம்பாலங்கள் கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கவே இல்லை என்றும், இதனால் பழைய கோட்டையில் செயல்பட முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றும், அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றும், அதனை தொடர்ந்து தமிழகத்தின் துயர் துடைக்கும் வண்ணம் கழக ஆட்சி அமைந்துள்ளது. மக்கள் விடுதலை பெற இந்த ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே எனது முதல் நோக்கமாகும். அந்த விதத்தில் தான் ஆட்சி பொறுப்பேற்ற முதலத் நாளே மக்கள் நலன் பெறும் ஏழு புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். மக்கள் நலன் ஒன்றேயே கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நடவடிக்கையும் எப்பொழுதும் அமைத்து கொண்டுள்ளேன்.
தமிழக சட்டமன்ற மற்றும் தலைமை செயலகம் தற்போதுள்ள புதிய கட்டத்திலிருந்து ஏற்கனவே இயங்கி வந்த புனித ஜார்ஜ் கோட்டியில் உள்ள கட்டடத்திற்கு மாற்ற நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றமும் தலைமை செயலகமும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இயங்கிட வேண்டுமென்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த புதிய கட்டடம் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்ட கட்ட்டடம் என்பதால்தான், நான் அதனை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த நடவடிக்கையும் நான் எப்பொழுதும் எடுத்ததில்லை என்பது நடுநிலையாளர் அனைவரும் அறிந்ததே. சென்ற முறை நான் தமிழக முதல்வராக இருந்தபோது, புதிய தலைமை செயலக கட்டடம் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் மத்திய அரசில் அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, கருணாநிதியின் தூண்டுதலால் எவ்வாறெல்லாம் தடை ஏற்படுத்தினார் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. எனது அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அவ்வாறு தடையை ஏற்படுத்திவர்கள்தான், பின்னர் புதிய தலைமை செயலக கட்டடத்தினை கட்டியுள்ளனர். அவ்வாறு தலைமை செயலகத்திற்கு புதிய கட்டடம் கட்டடப்பட்டுள்ளதை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. எனினும், தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டடத்திலிருந்து பணியாற்றுவது அரசு பணிக்கும் நிர்வாகத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்பதால் தான் புதிய தலைமை செயலக கட்டடத்திலிருந்து பணிபுரிய நான் விரும்பவில்லை.
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகம் 2008-ம் ஆண்டு முடிவில் துவங்கப்பட்டு கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடைமாமலேயே 2010-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்க விழா நடத்தப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும். புதிய தலைமை செயலகத்தின் மேற்கூரை கோபுரம் கட்டி முடிக்கப்படாமலேயே தற்காலிக செட்டிங் போடப்பட்டு, அதற்கே 3 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கி வைக்கப்பட்ட கட்டடம் முழுமையடைந்த கட்டடமாக இருந்ததிருந்தால் ஏன் முந்தைய அரசு அன்றைய தினம் முதலே அரசு துறைகளை புதிய கட்டட்திற்கு மாற்றவில்லை?
2010-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே புதிய கட்டிட துவக்கி விழாவினை நடத்திய காரணத்தால் சட்டமன்ற செயலகம் அப்போதிலிருந்தே புதிய கட்டத்தில் செயல்படத் தொடங்கியது.
19.3.10 அன்று புதிய கட்டடத்தில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சட்டமன்ற தரையில் புதிய திரைச்சீலை ஒன்றினால் சுவர்கள் மறைக்கப்பட்டும், தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டும் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற பேர ைதலைவர் இருக்கையும் கூட தற்காலிகமாக உயர்த்தப்பட்ட மேடையில் நிறுவப்பட்டது.
கட்டடம் முழுமை பெறாமலேயே திறப்பு விழா நடைப்பெற்றதை மக்கள் குறை கூறிய காரணத்தால் அவசர கோலத்தில் ஒரு சில துறைகல் மட்டும் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், தங்களது ஆட்சியை மக்கள் தூக்கியடித்துவிடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, புதிய கட்டடத்திலிருந்து, தான் பதவி இறங்குவதற்கு முன் பணிபுரிய வேண்டும் என்றே ஒரு எண்ணத்தில் தான், முழுமையாக கட்டி முடிக்கப்படாத கட்டடத்திலிருந்து செயல்பட அவசர முடிவு எடுத்தார். எனவே தான் அப்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரது இலாக்காக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மட்டும் புதிய தலைமை செயலக கட்டடத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. அவையும் முழுமையாக கொண்டு செல்லப்படவில்லை. டிசம்பர், 2010-க்கு பிறகே நான்கு அரசுத் துறைகள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகுதான் மாற்றப்பட்டது. முன்னாள் துணை முதல்வர் பொறுப்பிலிருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாற்றப்படவேயில்லே. இந்த புதிய கட்டடத்தில் சட்டமன்ற செயலகத்துறை, பொதுத்துறை, உள்துறை, தொழில்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை ஆகிய துறைகள் மட்டுமே மாற்றப்பட்டன.
மேலும், அப்போதைய அனைத்து அமைச்சர்களின் அறைகளும் மாற்றப்பட்டன. தலைமை செயலகத்தின் அனைத்து துறைகளும் மாற்றப்படாமல், அள்ளித்தெளித்த அவசரக் கோலத்தில் முந்தைய அரசு இரண்டு தலைமை செயலகங்களிலிருந்து செயல்பட்டு கொண்டிருந்தது. அதாவது, புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயல்படும் தலைமை செயலகம் ஒன்று, புதிய கட்டடத்தில் தலைமை செயலகம் ஒன்று என இரண்டு தலைமை செயலகங்கள் இயங்கி கொண்டு வந்தன.
மாற்றப்பட்ட துறைகளை தவிர, மேலும் ஒரு துறை மட்டும் செயல்படுவதற்கு தான் புதிய கட்டடத்தில் இடவசதி உள்ளது. இரண்டாம் பிளாக் முடிக்கப்பட்டால் தான் எஞ்சியுள்ள துறைகளுக்கு இடவசதி இருக்கும். அந்த இரண்டாவது பிளாக் கட்டடம் கட்டி முடிக்க இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும்.
சட்டமன்ற பேரவை செயலகம் உட்பட 36 துறைகளுள், வெறும் 6 துறைகள் மட்டும் புதிய கட்டடடத்திலிருந்தும், எஞ்சிய 30 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தும் செயல்பட்டால் அரசு இயந்திரத்தை செம்மையாக நிர்வகிக்க முடியுமா?
நிர்வாக வசதிகளை புறந்தள்ளிவிட்ட காரணத்தால் தான், முழுமை அடையாத கட்டடத்திலிருந்து செயல்பட்டு கொண்டிருந்தார்கள். தற்போதும் அவ்வாறு இரண்டு தலைமை செயலகங்களிலிருந்து செயல்படுவது நிர்வாக நலனுக்கு ஏற்றதா என்பதை தமிழக மக்கள் தான் கூற வேண்டும். துறை அமைச்சர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலும், துறை செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் மிறிதொரு கட்டடத்திலிருந்தும் செயல்பட்டால், அரசு இயந்திரம் முழுமையாக செய்பட இயலுமா?
தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதி பூண்டுள்ளேன். அவ்வாறு மக்கள் நலத்திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டுமெனில் அனைத்து தலைமை செயலக துறைகளும் ஒரே இடத்தில் செயல்படுவது தான் சரியானது ஆகும். அமைச்சர் பெருமக்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிக்க அவர்களை 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கட்டடத்திலிருந்து ஒவ்வொரு முறையும் வரவழைப்பதும், அமைச்சர்கள் பார்க்க வேண்டிய கோப்புகளையும் அவ்வாறு தொலைவிலுள்ள கட்டடத்திலிருந்து பெறுவதும், காலவிரையும், பொருள் விரையம் மற்றும் நிர்வாக குறைபாட்டை தானே ஏற்படுத்தும்?
தற்போது கட்டடப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த கட்டடத்தின் மேல்மாடிகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், புதிய தலைமை செயலக கட்டடம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்படுவதற்கு பல வணிகர்கள், குறிப்பாக ரிட்சி தெருவில் மின்னணு சாதனங்கலை விற்கும் வணிகர்களும், புதுப்பேட்டையிலுள்ள மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தே வந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக விரைவில் அந்த கடைகள் அங்கிருந்து காலி செய்யப்பட்டுவிடும் என்ற அச்சத்திலேயே அவர்கள் இருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் மத்திய பகுதியிலுள்ள அண்ணா சாலையில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளதால், தலைமை செயலகத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் மிகுந்த இடர்பாடு ஏற்படுகிறது. எனவே, மேம்பாலங்கள் கட்டப்படாமல் தான் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை தவரிக்கலாம் என்பதை உணர்ந்து, முந்தைய அரசு, மேம்பாலங்கள் கட்டப்படும் என்று 2010-11-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அறிவிப்புகளிலும் தெரிவித்திருந்தது. 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அண்ணா சாலையுள்ள சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் மேம்பாலங்கள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி கட்டப்படும் என குறிப்பிடப்பட்டது. மேலும், 2010-11-ம் ஆண்டு அத்துறை சார்ந்த அறிவிப்புகளில், சென்னை அண்ணா சாலையில் மேம்பாலங்கள் என்ற தலைப்பில், ரூ.500 கோடி மதிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தில், அண்ணா சாலையில் புதிய சட்டப்பேரவை வளாகத்திற்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு இடையே துவங்கி பட்டுலாஸ் சாலை சந்திப்பு வரை சுமார் 2.00 கிமீ நீளத்திற்கும், அண்ணா அறிவாலயம் அருகே துவங்கி சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரை சுமார் 3.00 கி.மீ நீளத்திற்கும் இரண்டும் சாலை மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. சாலை மேம்பாலம் துவங்கப்படாத நிலையில், புதிய தலைமை செயலக பகுதியிலுள்ள அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது.
இவ்வாறு நிர்வாக வசதியே இல்லாமல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரு பக்கமும், பல துறைகள் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் இயங்கி வந்தால், அரசை நிர்வகிக்க இயலாது என்தால் தான் சட்டமன்றம் மற்றும் அரசுத்துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்க வேண்டும் என்பதால், புனித ஜார்ஜ் கோட்டயில் எனது பணியை தொடருவேன் என்று தேர்தலின்போதே நான் அறிவித்திருந்தேன். எனவே, நிர்வாக நலன் கருதி நான் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.