எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்,மார்ச்.20 - மாயமான மலேசிய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறவில்லை, தரையில் விழுந்து நொறுங்கவும் இல்லை, கடலிலும் மூழ்க வில்லை என்று ஐ.நா. சபை சார்ந்த சி.டி.பி.டி.ஓ. அமைப்பு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அணுகுண்டு சோதனை தடை உடன்பாடு அமைப்பு (சி.டி.பி.டி.ஓ.), அணுகுண்டு சோதனைகளைக் கண்டறிவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதி நவீன கண்காணிப்புக் கருவிகளை நிறுவியுள்ளது.
நிலத்திலோ, கடலிலோ, வான் பரப்பிலோ அதிர்வுகள் எழுந்தால் இந்தக் கருவிகளில் பதிவாகிவிடும். போயிங் 777 போன்ற பெரிய விமானங்கள் வான்பரப்பில் வெடித்துச் சிதறினாலோ, தரையில் விழுந்து நொறுங்கினோ, கடலில் விழுந்தாலோ அந்த அதிர்வலைகள் நிச்சயமாக சி.டி.பி.டி.ஓ. கருவிகளில் பதிவாகியிருக்க வேண்டும்.
ஆனால் அதுபோன்ற எந்த அதிர்வலைகளும் கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகவில்லை. எனவே மாயமான மலேசிய விமானத்துக்கு அசம்பாவிதம் நேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சி.டி.பி.டி.ஓ. செயல் இயக்குநர் லாசினோ ஜெர்போ, நியூயார்க்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்பராசவுன்ட், இன்பராசோனிக் சென்சார்கள் மூலம் பூமியை முழுவதுமாக கண்காணித்து வருகிறோம், எங்களது கண்காணிப்புக் கருவிகளில் எதுவும் பதிவாகவில்லை, எனவே ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களது செயற்கைக்கோள்கள், கண்காணிப்பு கருவிகள் மூலம் விமானத்தை தேடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். மாயமான மலேசிய விமானத்தில் மொத்தம் 239 பேர் இருந்தனர். இதில் 153 பேர் சீனர்கள். எனவே விமானத்தை தேடும் பணியில் சீனா அதிக அக்கறை காட்டி வருகிறது. தற்போது 21 செயற்கைக் கோள்கள் உதவியுடன் சீன விண்வெளித் துறை விஞ்ஞானிகள் விமானத்தைத் தேடி வரு கின்றனர். சந்தேகத்துக்குரிய சீன எல்லைக்குள்பட்ட நிலப்பரப்புகள், கடல் பகுதிகளிலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்த 153 பயணிகள் குறித்தும் சீன போலீஸார் விசாரணை நடத்தி யுள்ளனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோலாலம்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மலேசியாவுக்கான சீன தூதர் ஹூனாங் ஹூகாங், சீனப் பயணிகள் விமானத்தைக் கடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மலேசிய ராணுவ ரேடார்களில் இருந்து தப்பிக்க மலைப் பிரதேசங்களில் விமானம் பறந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அந்தநாட்டு விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மலேசிய விமானி ஒருவர் கூறியபோது, மலேசியாவின் வடபகுதி மலைப் பிரதேசங்கள் வழியாக விமானம் பறந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அந்தப் பகுதியில் குணங் டகான் (2286 மீட்டர்), குணங் பின்டாங் (1828 மீட்டர்) ஆகிய சிகரங்கள் மட்டுமே உயமானவை. அந்த இரு சிகரங்களை பற்றி நன்கறிந்த விமானியால் 9000 அடி உயரத்தில் அந்த மலைப்பிரதேசத்தில் இரவிலும் விமானத்தை செலுத்த முடியும் என்று தெரிவித்தார்.
மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு வழக்கு ஒன்றில் அண்மையில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மாயமான விமானத்தின் விமானி ஜகாரி அகமது ஷா மக்கள் நீதிக் கட்சியின் தீவிர உறுப்பினர் ஆவார். கட்சித் தலைவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் விமானத்தை அவர் கடத்தினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஜகாரி அகமது ஷாவை தெரியாது என்று மறுத்துவந்த அன்வர் இப்ராகிம், முதல்முறையாக அவர் தனது உறவினர் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து கோலாலம்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், விமானி ஜகாரி அகமது ஷா எனது மருமகன்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர். என்னை அவர் பலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதற்காக அவரை குற்றவாளியாக பார்க்க வேண்டாம். விசாரணைக்குப் பிறகு எந்த முடிவுக்கும் வரலாம் என்று கேட்டுக் கொண்டார்.
மாயமான விமானத்தை தற்போது 26 நாடுகள் தேடி வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல்குளோப் என்ற தனியார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் உதவியுடன் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் வரை படங்களின் மூலம் விமானத்தை தேடி வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்கள் மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
கடந்த மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம் பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது. எந்த தடயமும் கிடைக்காத நிலையில் மலேசிய விமானத்தின் மர்ம முடிச்சை செயற்கைக்கோள்களால் மட்டுமே அவிழ்க்க முடியும் என்று நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மாலத்தீவு பகுதியில் மர்ம விமானம் பறந்ததாக அந்தப் பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 8-ம் தேதி காலை 6.15 மணி அளவில் ஜம்போ ஜெட் விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்ததை மாலத்தீவின் குடா ஹவுத்து பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் தீவில் மிகப் பெரிய விமானம் இவ்வளவு தாழ்வாக பறந்ததை நாங்கள் பார்த்தது இல்லை, விமானத்தின் கதவுகள்கூட தெளிவாகத் தெரிந்தன. அதன் சத்தம் காதை கிழிப்பதாக இருந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்கூட விமானத்தின் சத்தத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த மர்ம விமானம் அநேகமாக மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேதி, நேரம் ஆகியவை பொருத்தமாக இருப்பதால் இதுகுறித்தும் மலேசிய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிராம மக்களை மேற்கோள் காட்டி மாலத்தீவு நாளிதழான ஹவீரு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.